தெருநாய்களுக்கு சுப்ரீம் கோர்டின் புதிய விதிகள்! முழு விவரம் தெரிஞ்சிக்கோங்க!

Written ByThirishala S.P
Published: Sep 17, 2025, 01:21 PM IST|Updated: Sep 17, 2025, 01:21 PM IST

Delhi New Rules For Stray Dogs: டெல்லியில் தெருநாய்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு வெளியிட்டுள்ளது. மனிதர்கள்-நாய்கள் இடையே மோதலை குறைத்து, ரேபிஸ் தடுப்பதே குறிக்கோளாகும். 

Delhi New Rules For Stray Dogs: இதற்காகவே டெல்லி அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்கள் நேரடியாக உத்தரவிட்டதால், இப்போது தெருநாய்கள் பராமரிப்பு சட்டரீதியான கட்டுப்பாட்டில் வருகிறது.

Supreme Court1/8

சுப்ரீம் கோர்ட்:

சுப்ரீம் கோர்ட்:

டெல்லி அரசு தெருநாய்கள் பராமரிப்பு குறித்து புதிய விதிமுறைகள் வெளியிட்டுள்ளது. ரேபிஸ் நோய் தடுப்பு முக்கிய குறிக்கோள். மனிதர்கள் மற்றும் நாய்கள் இடையே மோதல் குறைக்க வேண்டும். இது சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி வந்துள்ள தகவலாகும்.
Who is responsible2/8

யார் பொறுப்பு?

யார் பொறுப்பு?

MCD (Municipal Corporation of Delhi) NDMC (New Delhi Municipal Council) DCB (Delhi Cantonment Board)

இந்த மூன்று அமைப்புகளும் தெருநாய்கள் ஸ்டெரிலைசேஷன், தடுப்பூசி, பராமரிப்பு அனைத்தையும் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Animal Birth Control Rules:3/8

Animal Birth Control Rules:

Animal Birth Control Rules: 2023 விதிகளின் படி தெருநாய்கள் அனைத்தும் ஸ்டெரிலைசேஷன் செய்யப்பட வேண்டும். AWBI அங்கீகரித்த NGOகளே பணியாற்ற முடியும். அனைத்து மருத்துவர், ஹாண்ட்லர், ஸ்டாஃப் அனைவரும் AWBI-யின் பயிற்சியுடன் மட்டுமே பணி செய்ய அனுமதி உண்டு.

Wellness 4/8

மையங்களின் வசதிகள்:

மையங்களின் வசதிகள்: ஒவ்வொரு நாய் பராமரிப்பு மையத்திலும் தனி கேனல்கள், பவர் பேக்கப்புடன் ஆப்ரேஷன் தியேட்டர், நாய் எடுத்துச் செல்ல வாகனம், கழிவு மேலாண்மை வசதி ஆகியவை இருக்க வேண்டும். மேலும், 30 நாட்கள் வரை பதிவுகளை வைத்திருக்க CCTV கேமரா அவசியம்.

Food Places5/8

உணவு இடங்கள்:

உணவு இடங்கள்: தெருநாய்களுக்கு உணவு கொடுக்க குறிப்பிட்ட இடங்கள் தீர்மானிக்கப்படும். RWA மற்றும் மக்கள் சேர்ந்து இந்த இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குழந்தைகள், மூத்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உணவு இடம் சுத்தமாக வைக்கப்பட வேண்டும், மீதியுணவை அப்படியே போடக் கூடாது.

Dangerous Dog 6/8

ஆபத்தான நாய்கள்:

ஆபத்தான நாய்கள்: ரேபிஸ் அல்லது கடிக்கும் பழக்கம் உள்ள நாய்கள் தனியாக பிடிக்கப்பட்டு பராமரிக்கப்படும். ரேபிஸ் நாய்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு, இறந்த பின் சுத்தமாக அகற்றப்படும். சாதாரண நாய்கள் ஸ்டெரிலைசேஷன், தடுப்பூசி செய்யப்பட்ட பின் அதே இடத்தில் மீண்டும் விடப்படும்.

Awarness7/8

கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு:

கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு: ஒவ்வொரு மாதமும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்படும். வருடாந்திர அறிக்கை AWBI-க்கு அனுப்பப்பட வேண்டும். பள்ளிகள், NGOகள், மக்கள் சேர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவர். இதில் நாய்களின் நடத்தை, உணவு கொடுக்கும் முறை, தடுப்பூசி குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.

Court order8/8

கோர்ட் உத்தரவு & நீதிபதிகள்:

கோர்ட் உத்தரவு & நீதிபதிகள்:

சுப்ரீம் கோர்ட் bench: ஜஸ்டிஸ் விக்ரம் நாத், NV அஞ்சாரியா, சந்தீப் மேத்தா. முந்தைய உத்தரவின்படி நாய்களை நிரந்தரமாக shelter-க்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்ப்பு இருந்தது. புதிய உத்தரவில் அது நிறுத்தப்பட்டது (stay order). இப்போது நாய்களை ஸ்டெரிலைஸ் மற்றும் தடுப்பூசி செய்து அதே இடத்தில் விட வேண்டும்.