சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீழ்த்தி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
MS Dhoni Fixing Controversy: சிஎஸ்கே அணி கடைசியாக ரிஷப் பண்ட் தலைமையிலான எல்எஸ்ஜி அணியை எதிர்கொண்டு வெற்றிபெற்றது. இப்போட்டியில் டாஸ் நிகழ்வின் போது சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி ஃபிக்ஸிங் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளன. இது குறித்தே இத்தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.
இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணி நிர்ணயித்த 167 இலக்கை 19.3 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி தொடர் தோல்விகளில் இருந்து மீண்டது. நடப்பாண்டு தொடரிலும் அந்த அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும்.
இந்த நிலையில், இப்போட்டியை வைத்து புதிய சர்ச்சை கிளப்பி உள்ளது. அதாவது, சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி டாஸின் போது பூ-வா தலை-யா என்பதை சத்தமாக சொல்லாமல் ரெஃப்ரியின் காதருகே கூறியதாகவும் இதன் மூலம் அவர் ஃபிக்ஸிங் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து, ஏன் தோனி தனது முடிவை சத்தமாக சொல்லவில்லை? இதன் மூலம் டாஸில் என்ன விழுந்தாலும், ரெஃப்ரி சிஎஸ்கே டாஸில் வென்றாக அறிவிப்பார். இதற்காகதான் தோனி அவ்வாறு செய்தார் என குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
ஆனால், உண்மையில் தோனி ஹெட்ஸ் என கூறும் சத்தம், டாஸ் நடந்த வீடியோவின் ஆடியோவை சத்தமாக வைத்து பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. அப்படி என்றால், ஏன் தோனி ரெஃப்ரியின் காதருகே கூற வேண்டும் என்ற கேள்வி எழும்புகிறது.
இதற்கு காரணம், மைதானத்தில் ரசிகர்களின் சத்தம் மிகப்பெரிய அளவில் இருந்தது. இதனால் ரெஃப்ரிக்கு தான் கூறுவது கேட்காது என்பதனால் அவர்,ரெஃப்ரியின் காதருகே கூறினார். இதுதான் நடந்த உண்மை ஆகும்.