அதிகாலை திடீரென தூக்கம் கலைகிறதா? ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை

Sleeping Problem Solution: உங்களுக்கு போதுமான ஆழ்ந்த தூக்கம் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியர்கள் பலர் போதுமான அளவிற்கு தூங்குவது உள்ள என அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது.

Sleeping Problem Side Effects: உங்களால் நல்ல தூங்க முடியாமல் இருக்கவும், நடு இரவில் தூக்கம் கலையவும் என்ன காரணம் என இந்தியா முழுவதும் 43,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பல திடுக்கிடும் கக்ரங்கள் வெளியாகி உள்ளது.

1 /7

நள்ளிரவில் திடீரென தூக்கம் கலைந்து விடுகிறதா? அதிகாலை வேளையில் எழுந்து அதன்பின் தூக்கமே வராமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் என்ன என்பது பற்றி சமீபத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அதுக்குறித்து பார்ப்போம். 

2 /7

இந்தியா முழுவதும் 348 மாவட்டங்களில் 43,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 61% ஆண்களும், 39% பெண்களும் பங்கேற்றனர். இதில் சுமார் 59% பேர் தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குவது தெரிய வந்துள்ளது. சுமார் 43000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 6% பேர் மட்டுமே தங்கள் தூக்கத்தை கெடுப்பது எது என்பது பற்றிய தெளிவினை பெற்றிருந்தனர்.

3 /7

39% பேர் மட்டுமே 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவதாகவும், 39% பேர் நான்கு முதல் 6 மணி நேரம் உறங்குவதாகவும், 20% பேர் வெறும் நான்கு மணி நேரம் மட்டுமே உறங்குவதாகவும் தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களுள் வெறும் 2% பேர் மட்டுமே எட்டு முதல் 10 மணி நேரம் தூங்குவதாக கூறியுள்ளனர். 

4 /7

இந்திய மருத்துவ ஆய்விதழ் தரவுகளின் படி தினமும் ஏழு முதல் எட்டு மணி நேர உறக்கம் அனைவருக்கும் கட்டாயம் அவசியம். ஆனால் இந்தியாவில் பல லட்சம் மக்கள் போதிய உறக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருவது சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

5 /7

72% பேர் அதாவது 14952 பேர் கழிவரை செல்வதற்காக தூக்கம் கலைந்து விடுவதாக காரணம் கூறியுள்ளனர். வெளிப்புற சப்தம் மற்றும் கொசுக்களால் தூக்கம் தடைபடுவதாக 22% பேர் தெரிவித்துள்ளனர். 6% பேர் மொபைல் அழைப்பு மற்றும் குறுந்த தகவல்கள் தூக்கத்தை கலைப்பதாக கூறியுள்ளனர். 

6 /7

இது ஒரு பக்கம் இருக்க நள்ளிரவில் குறிப்பாக அதிகாலை 2 மணி முதல் மூன்று மணி வரை தூக்கத்தில் இருக்கும் பலர் திடீரென உறக்கம் கலைந்து எழுந்து விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மன அழுத்தத்தால் தூண்டப்படும் கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகரிப்பே இதற்கு காரணம் என்று வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். 

7 /7

மன அழுத்தம் காரணமாக மெக்னீசியம் குறைபாடு இருந்தால் கார்டிசோல் அளவு அதிகரிக்கும் என்றும், கார்டிசோல் அளவு குறைவாக உள்ளவர்கள் தங்கள் மெக்னீசியம் அளவை பரிசோதிக்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.