மின்கட்டணம் 3% உயர்வு...? தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய அப்டேட்!

Tamil Nadu Government: தமிழ்நாட்டில் மின் கட்டணம் இந்தாண்டு 3 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு இன்று விரிவாக விளக்கம் அளித்துள்ளது.

Electricity Bill: தமிழ்நாட்டில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே, ஜூலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டன. அந்த வகையில், இந்தாண்டும் உயரலாம் என கூறப்பட்டது.

1 /8

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை 3 சதவீதம் உயர்த்த மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

2 /8

குறிப்பாக, 2023ஆம் ஆண்டு ஜூலையில் 2.18% கட்டணமும், 2024ஆம் ஆண்டு ஜூலையில் 4.8% கட்டணமும் உயர்த்தப்பட்டது.   

3 /8

அதே வகையில், இந்தாண்டும் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.  

4 /8

மின் கட்டண உயர்வு குறித்து இதுபோன்ற கடந்த சில நாட்களாகவே பல்வேறு ஊடகங்களில் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், தமிழ்நாடு மின்சாரத்துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.   

5 /8

தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

6 /8

எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை நடைமுறைப்படுத்துகையில் வழங்கிடும்போது, அதனை வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

7 /8

மேலும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.   

8 /8

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் என மொத்தம் 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.