EPFO Latest News: இபிஎஃப் ஊதிய உச்சரவம்பு அதிகரிக்கவுள்ளதா? இதனால் ஏற்படக்கூடும் நன்மைகள் என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
EPFO Wage Ceiling Hike: உலகளாவிய தரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஓய்வூதிய பாதுகாப்பு இன்னும் குறைவாகவே உள்ளது. அதிகரித்து வரும் ஆயுட்காலம், அதிக வாழ்க்கைச் செலவுகள் மற்றும் குறைந்த தனிப்பட்ட சேமிப்பு ஆகியவற்றுடன், தொழிலாளர்களுக்கு கட்டமைக்கப்பட்ட, நீண்ட கால ஓய்வூதியத் திட்டமிடல் தேவை. ஊதிய உச்சவரம்பை அதிகரிப்பது மில்லியன் கணக்கானவர்களை பாதுகாப்பு வலையில் கொண்டு வருவதற்கான எளிய வழிகளில் ஒன்றாகும்.
1/10இபிஎஃப் உறுப்பினர்களுக்கான ஒரு பெரிய சீர்திருத்தத்தை செய்ய ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தயாராகி வருகின்றது. வருங்கால வைப்பு நிதி மற்றும் அதன் ஓய்வூதியத் திட்டத்திற்கு கட்டாய பங்களிப்பு செய்வதற்கான ஊதிய உச்சவரம்பை அதிகரிப்பது குறித்து EPFO ஆலோசித்து வருவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. EPFO -வின் தற்போதைய ஊதிய உச்சவரம்பு மாதத்திற்கு ரூ.15,000 ஆக உள்ளது.
2/10இதற்கு முன் EPF உச்சவரம்பு கடைசியாக 2014 இல் திருத்தப்பட்டது, அப்போது அது மாதத்திற்கு ரூ.6,500 இலிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்த மாற்றம் செப்டம்பர் 1, 2014 முதல் அமலுக்கு வந்தது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) யார் கட்டாயமாக சேர வேண்டும் என்பதை உச்சவரம்பு தீர்மானிக்கும் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. ஒட்டுமொத்தமாக, ஓய்வூதிய பாதுகாப்பை வலுப்படுத்தவும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்தவும் எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகின்றது.
3/10தற்போதுள்ள விதியின் படி, ரூ.15,000 க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்கள் இபிஎஃப் -இன் கீழ் கட்டாயமாக சேர்க்கப்படுவதில்லை. இதனால், வரம்பை விட சற்று அதிகமாக சம்பாதிக்கும் பல தனியார் துறை ஊழியர்கள் இன்னும் எந்த முறையான ஓய்வூதியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. இதனால் இந்த ஊழியர்கள் பின்னர் வயதான காலத்தில் தங்கள் குழந்தைகளைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
4/10அடிப்படை சம்பளத்தில் மாதத்திற்கு ரூ.15,000 வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே EPF சேர்க்கை கட்டாயமாகும். இதற்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு அதில் சேர்வதும், விலகுவதும் அவர்கள் கையில் உள்ளது. இது ஓய்வூதியக் காப்பீட்டில் இடைவெளியை உருவாக்குகிறது, குறிப்பாக நகர்ப்புறங்களில், தொடக்க நிலை சம்பளமுமே பெரும்பாலும் வரம்பைக் கடக்கிறது.
5/10இவற்றை மனதில் வைத்து, EPFO ஊதிய உச்சவரம்பை ரூ.25,000 ஆக அதிகரிக்கக்கூடும். டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் நடக்க திட்டமிடப்பட்டிருக்கும் மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொழிலாளர் அமைச்சகத்தின் உள் மதிப்பீட்டின்படி, வரம்பை ரூ.10,000 உயர்த்துவது 1 கோடிக்கும் மேற்பட்ட கூடுதல் தொழிலாளர்களை கட்டாய EPF மற்றும் EPS கவரேஜின் கீழ் கொண்டு வரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
6/10தொழிலாளர் சங்கங்கள் பல ஆண்டுகளாக இந்த உயர்வை கோரி வருகின்றன. இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு வலையை வலுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போகிறது. அதிக EPF உச்சவரம்பு தானாகவே அதிக தொழிலாளர்களை நீண்ட கால ஓய்வூதிய சேமிப்பிற்குள் கொண்டுவரும்.
7/10இன்று EPF பங்களிப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என காணலாம். EPF இன் கீழ் வரும் ஊழியர்களுக்கு: ஊழியர்களின் சம்பளத்தில் 12% EPF-க்கு செல்கிறது, நிறுவனம் 12% பங்களிக்கின்றது. அதில் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) 8.33%, EPF-க்கு 3.67% செல்கிறது. ஊதிய உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டால், EPF மற்றும் EPS பங்களிப்புகள் இரண்டும் உயரும், இதனால் அதிக ஓய்வூதிய சேமிப்பு மற்றும் அதிக ஓய்வூதிய கொடுப்பனவுகள் கிடைக்கும்.
8/10உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டால், அது பல்வேறு வகை தொழிலாளர்களை எவ்வாறு பாதிக்கிறது? ரூ.15,000 க்கு மேல் ஆனால் ரூ.25,000 க்கு குறைவாக சம்பாதிக்கும் ஊழியர்கள் இப்போது தானாகவே EPF மற்றும் EPS-ன் கீழ் காப்பீடு செய்யப்படுவார்கள். ஏற்கனவே ₹25,000 க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு இதனால் பெரிய தாக்கம் இருக்காது.
9/10ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால், நிறுவனங்கள் EPF பங்களிப்புகளை அதிக அடிப்படை ஊதியத்தில் கணக்கிட வேண்டும். இது ஒவ்வொரு ஊழியருக்கான செலவையும் அதிகரிக்கும். இருப்பினும், இது ஊழியர் நலனை வலுப்படுத்தும், தொழிலாளர்களிடையே நீண்டகால நிதி பாதிப்பைக் குறைக்கும்.
10/10பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது.சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.