எதிர்காலம் முக்கியம்! கல்யாணம் ஆனவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 அரசு திட்டங்கள்

Government Schemes For Indian Couple: ஒவ்வொரு இந்திய தம்பதியினரும் முக்கியமான ஐந்து அரசு திட்டங்கள் குறித்து அறிந்துக்கொள்வது அவசியம். நல்ல தம்பதிகளாக புத்திசாலித்தனமாக திட்டமிடுங்கள், அதிகமாக சேமிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும்.

5 Important Government Schemes: ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள் மற்றும் அரசும் தங்கள் தரப்பில் இருந்து இவர்களுக்கென சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எதிர்காலத்தைப் பாதுகாக்க சேமிப்பு மற்றும் முதலீடு குறித்து பார்ப்போம்.

1 /5

வீட்டுக் கடன் வட்டியில் ₹2.67 லட்சம் வரை மானியம் கிடைக்கும். உதாரணம்: ₹25 லட்சம் கடனில், நீங்கள் சுமார் ₹2.35 லட்சம் வட்டியைச் சேமிக்கலாம். யார் விண்ணப்பிக்கலாம்: முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் (ஒருங்கிணைந்த வருமானம் ஆண்டுக்கு ₹18 லட்சம்). எப்படி விண்ணப்பிப்பது: pmaymis.gov.in தளத்தை பார்வையிடவும் CLSS பிரிவின் கீழ் விண்ணப்பிக்கவும் மற்றும் தேவையானஆவணங்களுடன் உங்கள் வங்கியை அணுகவும்.

2 /5

சிறிய சேமிப்புகளில் மிக அதிக வட்டி 8.2% கிடைக்கும் சுகன்யா சம்ரிதி யோஜனா. முதலீட்டு வரம்பு: ஆண்டுக்கு குறைந்தபட்சம் ₹250 - அதிகபட்சம் ₹1.5 லட்சம். எப்படி விண்ணப்பிப்பது: தபால் அலுவலகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் கணக்கைத் திறக்கவும். தேவையான ஆவணங்கள் பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆவணங்கள்.

3 /5

பிரசவ காலத்தில் ₹700 - ₹1,400 உதவித்தொகை கிடைக்கும். BPL ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், SC/ST பெண்கள் அல்லது குறைந்த வருமான ஈட்டும் குடும்ப பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ASHA பணியாளர்களிடம் பதிவு செய்யவும். பிபிஎல் ரேஷன் அட்டை மற்றும் கர்ப்ப சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கவும்,

4 /5

26 வாரங்கள் வரை ஊதியத்துடன் பெண்களுக்கு விடுப்பு மற்றும் தந்தையருக்கு 15 நாட்கள் விடுப்பு (தனியார் துறையில் மாறுபடும்) கிடைக்கும். விண்ணப்பிக்கும் முறை:  மகப்பேறு கால ஆவணம் மற்றும் தந்தையர் விடுப்பு விண்ணப்பத்தை பணி புரியும் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கர்ப்ப கால மருத்துவச் சான்று அவசியாகும்.

5 /5

80CCD(1B) இன் கீழ் ₹50,000 வரை சலுகை பெறலாம். தேசிய ஓய்வூதியத் திட்டதில் இணைவதன் மூலம் 8% வரை வட்டி கிடைக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: enps.nsdl.com தளத்தை பார்வையிடவும். ஆன்லைனில் அல்லது உங்கள் வங்கி மூலம் கணக்கைத் திறக்கவும்.