Wedding Advance Increase for Govt Employees: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியாகி உள்ளது.
அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கு திருமண முன்பணம் தமிழக அரசால் வழங்கப்படு வருகிறது. இதுவரை ரூ. 10 வரை திருமண முன்பணமாக வழங்கப்பட்டு வருகிறது.
இச்சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிகாலத்தின் தங்களின் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணம் ரூ. 5 லட்சமாக உயர்த்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. திருமண முன்பணத்தை உயர்த்த வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், தற்போது அரசாணை வெளியாகி இருக்கிறது.
திருமணத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பு, இந்த உதவித்தொகை கிடைக்கும். இது, 36 தவணைகளில் வசூலிக்கப்படும்.
பெற்றோர், கணவன், மனைவி அரசு ஊழியர்களாக இருந்தால், இந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு குடும்பத்தில் ஒரு முறை மட்டுமே முன்பணம் பெற முடியும்.
இந்த பணம் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு திருமணத்தின்போது, பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.