குரு பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் இவைதான், ராஜவாழ்க்கை அமையும்

Published: Apr 17, 2025, 04:41 PM IST|Updated: Apr 17, 2025, 04:41 PM IST

Guru Peyarchi 2025: குரு பெயர்ச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. மே 14 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Guru Peyarchi Palangal: குரு பகவான் சுமார் 13 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். குரு பெயர்ச்சி ஆகும்போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அதிக நன்மைகளை அளிக்கும் என இங்கே காணலாம்.

Guru Peyarchi 20251/10

குரு பெயர்ச்சி 2025

சில நேரங்களில், ஒரு கிரகம் அதன் நிலையான வேகத்தை விட வேகமாக நகர்ந்து, அதன் ராசியை வேகமாக மாற்றி, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்ந்து, சிறிது நேரத்திற்குப் பிறகு, பின்னோக்கிச் சென்று அதன் முந்தைய ராசிக்குத் திரும்பும். கிரகங்களின் இந்த இயக்கம் அதிசார பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த இயக்கம் கிரகத்தின் இயல்பான இயக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதன் விளைவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

Guru Peyarchi2/10

குரு பெயர்ச்சி

மே 14, 2025 முதல், குரு பகவான் அதிசார பெயர்ச்சியை மேற்கொள்வார். இதன் காரணமாக, அவர் மே 14 ஆம் தேதி மிதுன ராசியில் நுழைவார். இதற்குப் பிறகு, அக்டோபர் 18 ஆம் தேதி, அவர் கடக ராசிக்குள் பெயர்ச்சி ஆவார். பின்னர் நவம்பர் 11 ஆம் தேதி, அவர் மீண்டும் பிற்போக்கு நிலையில், அதாவது வக்ர பெயர்ச்சி அடைந்து மிதுன ராசிக்குள் நுழைவார். இதற்குப் பிறகு, குரு 2026 ஆம் ஆண்டிலும் தனது ராசியை மாற்றி, அப்போதும் அதிசார பெயர்ச்சி அடைவார்.

Guru Peyarchi Palangal3/10

குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி, குறிப்பாக குரு அதிசார பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிக நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் அதிக வெற்றிகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Cancer4/10

கடகம்

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த காலத்தில் குரு அருளால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்வில் நிம்மதி கிடைக்கும். வேலை அல்லது தொழிலில் மாற்றம் விரும்புவோருக்கு, அதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

Scorpio5/10

விருச்சிகம்

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு அதிசார பெயர்ச்சி அதிக நன்மை பயக்கும். இந்த நேரத்தில் உங்கள் சிந்தனை நேர்மறையாக மாறும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உறவுகளில் புரிதல் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

Sagittarius6/10

தனுசு

தனுசு: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு பண ஆதாயம் ஏற்படும். புதிய வீடு, கார் வாங்கும் கனவு நிறைவேறும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சில பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் பெரிய ஏற்றம் ஏற்படும்.

Capricorn7/10

மகரம்

மகரம்: மகர ராசிக்காரர்கள் இப்போது முன்பை விட சுறுசுறுப்பாகவும் நேர்மறையாகவும் உணர்வார்கள். உங்கள் சகோதர சகோதரிகளுடனான உங்கள் உறவுகள் மேலும் மேம்படும். இந்த காலத்தில் சில புதிய திறன்களை வளர்த்துக்கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களால் மக்கள் நல்ல பலன்களை பெறுவார்கள். ஊடகம், எழுத்து, கற்பித்தல் அல்லது நெட்வொர்க்கிங் துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

Pisces8/10

மீனம்

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு, குரு பெயர்ச்சி 2025 அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த நேரத்தில் அவர்களுடைய ஆளுமை மேம்படும். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் பலப்படுத்தப்படும். உங்கள் பேச்சுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். திருமணம், தொழில் அல்லது வணிகம் தொடர்பான முடிவுகளை எடுக்க இது ஒரு நல்ல நேரமாகவும் இருக்கும்.

Guru Gochar9/10

குரு பகவானின் அருள் பெற

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறவும், குழந்தை பாக்கியம் கிட்டவும், செல்வம் பெருகவும், 'ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்' என்ற குரு காயத்ரி மந்திரத்தை சொல்வது நல்லது.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.