வாடகை வீட்டில் இருப்பவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்குவது எப்படி?

Kalaingar Magalir Urimai Thogai : வாடகை வீட்டில் இருப்பவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

Kalaingar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதால், இந்த திட்டத்தில் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு கிடைக்குமா?, எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

 

1 /9

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட் 2025-26ல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கான பணிகள் இப்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளன.

2 /9

இதனால் இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேராதவர்கள், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இந்த திட்டத்தில் சேர ஒரு சூப்பரான வாய்ப்பை அரசு கொடுத்திருக்கிறது.   

3 /9

தகுதியான பெண்கள் எல்லோரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு இப்போது விண்ணப்பிக்கலாம். அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

4 /9

யார் தகுதியான பெண்கள் என்பதை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம். அதேநேரத்தில் வாடகை வீட்டில் இருப்பவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாமா? எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

5 /9

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு இருந்தாலே போதும். சரியான முகவரியில் ரேஷன் கார்டு வாங்கியிருந்தீர்கள் என்றால் நீங்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். 

6 /9

வசிக்கும் முகவரியில் ரேஷன் கார்டு இருப்பது அவசியம். ஏனென்றால் அதிகாரிகள் நேரடி கள ஆய்வு செய்யும்போது ரேஷன் கார்டு இருக்கும் முகவரியில் நீங்கள் வசிக்கவில்லை என்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் நிராகரிக்க வாய்ப்புள்ளது. 

7 /9

மற்றபடி, சொந்த வீடு இல்லையென்றாலும் வாடகை வீட்டில் வசித்தாலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ரேஷன் கார்டில் பெயர் இடம்பெற்றுள்ள பெண்களில் யாரேனும் ஒருவருக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்

8 /9

குடும்ப அட்டையில் ஆண்கள் புகைப்படம் இருந்தாலும் பெண்கள் குடும்ப தலைவியாக கருதப்பட்டு மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் பெறலாம். இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு வயது 21 நிரம்பியிருக்க வேண்டும். 

9 /9

திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர். இதனால் அவர்களும் மாதம் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற முடியும்.