புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலையை 1 நிமிடத்தில் தெரிந்து கொள்வது எப்படி?

New ration card : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலையை ஒரு நிமிடத்தில் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம்.

New ration card Application : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை வீட்டில் இருந்தபடியே ஒரு நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம். 

1 /8

புதிய ரேஷன் கார்டு கேட்டு தினமும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை பல்வேறு கட்டங்களாக நடக்கும்.   

2 /8

மொத்தம் 4 நிலைகளை கடந்தால் மட்டுமே ரேஷன் கார்டு பிரின்டுக்கு செல்லும். முதல் நிலை, நீங்கள் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பது ஆகும்.

3 /8

இரண்டாவது நிலை, உங்கள் விண்ணப்பத்தின் ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா? என சரிபார்க்கப்படும். அடுத்து துறை அதிகாரிகள் ரேஷன் கார்டு ஆவணங்களை சரிபார்ப்பார்.   

4 /8

கடைசியாக உங்களின் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தாலுக்கா வட்ட வழங்கல் அதிகாரியிடம் செல்லும். அவர் ஒப்புதல் கொடுத்தபிறகே உங்கள் ரேஷன் கார்டு பிரின்டுக்கு செல்லும்.  

5 /8

இந்த நான்கு நிலைகளில் ரேஷன் கார்டு விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், ரேஷன் கார்டு அப்ளிகேஷன் நம்பர் கொடுப்பார்கள்.  

6 /8

அந்த நம்பரை வைத்து, முதலில் டிஎன்பிடிஎஸ் வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும். அதில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலை என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.

7 /8

இப்போது உங்களின் அப்ளிகேஷன் நம்பரை உள்ளிட வேண்டும். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பது உங்கள் ஸ்கிரீனில் தெரியும்.

8 /8

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் இப்போது மெதுவாகவே பரிசீலிக்கப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதால் புதிய ரேஷன் கார்டு ஒப்புதலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.