அணு ஆயுத தாக்குதல் நடந்தால்... என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கி உள்ளன. ஆபத்து ஏற்படும் நேரத்தில் இவற்றை பின்பற்றுவது அவசியம்.

Nuclear Attack: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கி உள்ளன. ஆபத்து ஏற்படும் நேரத்தில் இவற்றை பின்பற்றுவது அவசியம்.


 

1 /8

இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் (India Pakistan War Tension) நிலவி வருகிறது. இந்த இரு நாடுகளும் அணு ஆயுதம் வைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியிருக்க, ஒருவேளை அணு ஆயுத தாக்குதல் நடந்தால் என்ன ஆகும் என்ற அச்சமும் சர்வதேச சமூகத்தில் எழுந்துள்ளது.   

2 /8

ஒரு அணு ஆயுத தாக்குதல் (Nuclear Attack) மூலம் கதிரியக்கப் பொருட்களின் பரவல் ஏற்படும். இதன்மூலம், அணு ஆயுத தாக்குதல் நடந்த இடத்தை சுற்றியுள்ள சில கிலோமீட்டர்களுக்கு காற்று, நீர், தரை மேற்பரப்புகள் அனைத்தும் மாசுபடும். அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்பதை இங்கு காணலாம்.  

3 /8

அமெரிக்காவில் அவசர உதவி, பேரிடர் நிவாரணம் மற்றும் பேரிடர் தயார்நிலை கல்வியை வழங்கும் அமைப்புதான் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம். இதன் கூற்றுப்படி, அணு ஆயுத தாக்குதலால் ஏற்படும் கதிர்வீச்சில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தூரம் செல்வது, பாதுகாப்பு நோக்கி செல்வம் மற்றும் காலம் ஆகிய மூன்று முக்கிய காரணிகள் உள்ளன என்கிறது.   

4 /8

தூரம் செல்வது: தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அணு ஆயுத துகள்களில் இருந்து எவ்வளவு தூரம் இருக்கிறீர்களோ செல்கிறீர்களோ, அவ்வளவு பாதுகாப்பாக இருப்பீர்கள். வீட்டின் அடித்தளம் அல்லது அலுவலக கட்டிடம் போன்றவற்றில் அடித்தளத்திற்கு (Basement) செல்ல வேண்டும். ஒரு கட்டடத்தின் தரை தளத்தில் இருப்பதை விட உங்களுக்கு இதுவே அதிக பாதுகாப்பை அளிக்குமாம்.  

5 /8

பாதுகாப்பு: அணு ஆயுத தாக்குதல்கள் நடந்த சுற்றத்தில் நீங்கள் இருந்தால், கதிரியக்க பொருள்களுக்கும் உங்களுக்கும் நடுவே மிகவும் தடினமான மற்றும் கனமான பொருள்கள் இருக்கும்படி உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு கான்கிரீட்கள், செங்கல்கள், தடிமனான சுவர்களை கொண்டு பாதுகாத்து்ககொள்ளுங்கள்.  

6 /8

காலம்: உயிருக்கு ஆபத்து விளைவுக்கு கதிரியக்கம், தாக்குதல் நடந்து நேரம் செல்ல செல்ல அதன் தாக்கம் குறையும். தாக்குதல் நடந்த முதல் இரண்டு வாரங்கள்தான் மிகவும்  கொடூரமானவை. தாக்குதலின் போது இருந்த கதிர்வீச்சு அளவு முதல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு சுமார் 1% மட்டுமே குறையும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அணு ஆயுத தாக்குதல் நடந்தால் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாதவை குறித்து இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம்.  

7 /8

செய்ய வேண்டியவை: வீட்டிலும், கட்டடங்களுக்கு உள்ளேயும் இருக்க வேண்டும். ரெடியோ, தொலைக்காட்சிகள் இருந்தால் அதன்மூலம் வரும் தகவல்களை கேட்கலாம். வீட்டின் கதவுகள், ஜன்னல்களை மூடிவிட வேண்டும். உங்களின் உணவு, குடிநீர் போன்றவற்றை மூடவும். மூட பொருள்களை மட்டும் சாப்பிடவும். ஒருவேளை வெளியே இருந்தால், ஈரமான வேட்டி, சேலை, துணிக் கொண்டு முகத்தையும் உடலையும் மூடிக்கொள்ள வேண்டும், வீடு திரும்பிய அவற்றை அவிழ்த்துவிட்டு ஆடையை மாற்றிக்கொள்ள வேண்டும். துவைத்து, புதிய ஆடைகளை மட்டும் பயன்படுத்தவும். மருத்துவ சிகிச்சை, வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளின்போது அரசு அமைப்புகளுடன் ஒத்துழைக்க வேண்டும்.   

8 /8

செய்யக்கூடாதவை: பயப்பட்டு பதற்றத்தில் சிக்க கூடாது. மேலும், வதந்தியையோ, போலி செய்திகளையோ பரப்பக்கூடாது. வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. கிணறுகள், குளங்களில் தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவும். மூடாமல் இருந்த பயிர்கள், காய்கறிகள், உணவுகள், குடிநீர், பால் ஆகியவற்றை உண்ண வேண்டும். அரசு ஊழியர்கள், அதிகாரிகள் சொல்வதை புறக்கணக்காதீர்கள்.