இந்த வருடம் வெப்பம் அலை மார்ச் மாதம் முதல் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக மயக்க தற்போது ஏசி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனுடன் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தலாம், கூலரை பயன்படுத்தி வந்த மக்கள் தற்போது ஏசி பயன்படுத்துகின்றனர். இதனால் ஏசி பயன்பாடு அதிகரிக்கத்துள்ளது.
பொதுவாக நாம் ஏசியில் தீ அல்லது வெடிப்பு பற்றிய செய்திகளை அடிக்கடி கேட்டிருப்போம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் வீட்டிலும் இது போன்ற அசம்பாவிதத்தை தவிர்த்து எதிர்காலத்தில் ஏற்படும் விபத்தைத் தடுக்க நாம் பயன்படுத்தும் ஏசி எப்போது எந்த சமயத்தில் அல்லது ஆண்டில் வாங்கப்பட்டது என்பதை தெரிந்திருக்க வேண்டும். இதன் மூலம் நாம் விபத்துக்களை தவிர்க்க முடியும்.
நாம் ஏசி தீப்பிடிக்கும் செய்தியை கேள்விப்பட்டு இருப்போம். அதற்கு முக்கிய காரணம் கசிவு மற்றும் சரியாக சர்வீஸ் செய்யப்படாததே. இந்தப் பிரச்சனை பெரும்பாலும் பழைய ஏசிகளில் காணப்படுகிறது.
இதற்கு மற்றொன்று காரணம் ஏசி வாங்கிய அதே வருடம் சர்வீஸ் தேவைப்படலாம். அப்படி நாம் செய்ய தவறும் போது இது போன்ற அசம்பாவிதம் நிகழ்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நாம் வாங்கும் ஏசி எத்தனை ஆண்டுகள் அல்லது எவ்வளவு காலத்திற்கு பயன்படுத்தலாம் என்று தெரிந்திருக்க வேண்டும்.
சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஏசிகளும் அவற்றின் கம்ப்ரசர்களுக்கு 10 வருட உத்தரவாதத்துடன் வருகின்றன. எனவே, நீங்கள் வாங்கும் ஏசியையும் 10 வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். அதேபோல் விண்டோ ஏசியை 8 முதல் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.
இது தவிர, நீங்கள் ஸ்பிளிட் ஏசியை 10-15 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம், இருப்பினும் நீங்கள் இதனை சர்வீஸ் செய்து பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் உங்கள் ஏசியை முறையாகப் பயன்படுத்தி, அவ்வப்போது சர்வீஸ் செய்து வந்தால், எந்த பயமும் இல்லாமல் நீண்ட நாட்கள் அதைப் பயன்படுத்தலாம்.
மறுபுறம், சரியான பராமரிப்பு இல்லமல் பயன்படுத்தினால் தீ அல்லது குண்டு வெடிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும்.
இந்தச் செய்தியைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.