நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இளம் வீரர்களின் திறமையை நிரூபிக்க ஐபிஎல் தொடர் ஒரு நல்ல வாய்ப்பாகும். ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் மூலம் பலர் மக்களின் கவனத்தை பெற்று வருகின்றனர். அப்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் திறமையை வெளிப்படுத்து கவனத்தை ஈர்த்த வீரர்கள் குறித்து இங்கு பார்க்கபோகிறோம்.
ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. எனவே ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இங்கிலாந்துக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குஜராத் டைடன்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் சாய் சுதர்சன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் அவர் இருக்கிறார். எனவே அவரை இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ யோசித்து வருகிறது.
இந்திய அணிக்காக விளையாடி பல ஆண்டுகள் ஆகும் கருண் நாயரையும் சேர்க்க பிசிசிஐ யோசித்து வருதாக கூறப்படுகிறது.
இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் டெஸ்ட் அணியில் கம்பக் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ரஜத் படிதார் ஏற்கனவே இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். ஆனால் அப்போது அவர் சரியாக விளையாடாததால் நீக்கப்பட்டார். இச்சூழலில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி ரஜத் படிதார் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்சிபி அணியில் இருந்து தனது திறமையை வெளிப்படுத்தி வரும் தேவ்தத் படிக்கல் பெயரும் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.