CSK vs MI: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிஎஸ்கே அணி பந்து வீசும்போது, வேகப்பந்து வீச்சாளர் கலில் அகமது மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மோதிய நிலையில், அப்போட்டியில், சென்னை அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடி வரும் கலீல் அகமத், பவர் பிளேவின் போது சிறப்பாக பந்து வீச்சினார். அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மும்பை அணி திணறிய நிலையில், அந்த அணியின் தொடக்க வீரர்களான ரோகித் மற்றும் ரியான் ரிக்கில்டன் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில் தான், சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமத் இணைந்து இருக்கும் படியான வீடியோ வைரலாகி வருகிறது.
அதாவது வேகபந்து வீச்சாளர் கலீல் மற்றும் கேப்டன் ருதுராஜ் சேர்ந்து பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
போட்டி தொடங்கிய போது பந்து வீச தயாரான கலீல் அகமதிடம் ருதுராஜ் ஓடிவந்து எதோ வழங்குகிறார். அதனை வாங்கி கொண்ட கலீலும் இரண்டு சிறிது வினாடிகளில் திருப்பி கொடுக்கிறார். அதனை ருதுராஜ் வாங்கிகொண்டு தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சென்றார்.
இது தொடர்பான வீடியோ பரவி வரும் நிலையில், சிஎஸ்கே ஆதரவாளர்கள் ருதுராஜ் - கலீலின் மோதிரத்தை வாங்கியதாகவும், எதிர்பாளர்கள் பந்தை சேதப்படுத்தி சிஎஸ்கே ஏமாற்றி வென்றதாக கூறி வருக்கின்றனர்.