Health Risks Of Eating Vada: காலை மற்றும் மாலை நேரங்களில் பலரும் விரும்பி சாப்பிடுவதில் ஒன்று வடை. இதை சாப்பிடுவதால் எண்ணற்ற பிரச்னைகள் வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
Health Risks Of Eating Vada: வடை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், இருதய நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என மருத்துவர் கூறுகிறார்.
இந்தியர்களின் வீடுகளில் பிரதான உணவாக வடை இருக்கிறது. குறிப்பாக, பண்டிகை நாட்கள், விசேஷ தினங்களில் வடை என்பது இந்தியவர்களின் வீடுகளில் முக்கியமாக வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், காலை மற்றும் மாலை நேரங்களிலும் டீ, காபியுடனும் மக்கள் வடைகளை சாப்பிட்டு வருகின்றனர்.
இப்படி வடையை அதிகம் சாப்பிடுவது எண்ணற்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம். வடையில் அதிகளவு எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இதனால், கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்ந்து, பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனவே, வடையை சாப்பிடுவதையே தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், வடை சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மருத்துவர் அருணாச்சலம் முத்தையா கூறியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்ட அவர், "வடை என்பது நாம் நாள்பட சாப்பிடும் 4 இட்லிக்கு அதிகமாக உடலுக்கு கிடைக்ககூடிய அதிக கலோரி கொண்டவை ஆகும்.
பெரு நகரங்களில் காலையில் நடைபயிற்சிக்கு பிறகு, சாலையோரங்களில் உள்ள கடைகளில் போண்டா, வடைகளை சாப்பிடுகின்றனர். இப்படி நடைபயிற்சிக்கு பிறகு வடை சாப்பிடுபவர்களுக்கு நடைபயிற்சி பற்றி புரிதல் இல்லை என்பது தான் உண்மை. நாம் ஒருநாளைக்கு 3 மடங்கு அதிகமாக சாப்பிடுகிறோம். இதனால், உடல் பருமன், நீரிழிவு நோய்கள், ரத்தக் கொதிப்பு, இருதய பிரச்னைகள் ஏற்படலாம். இது தான் 70 சதவீத இறப்புக்கு காரணம் என சொல்கிறோம்.
எனவே, காலை உணவில் வடை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், மதிய நேரங்களில் அதிகப்படியான காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலும் ஆரோக்கியமான இருக்கும்" என்றார்.
எனவே, காலை நேரத்தில் அதிக எண்ணெய் உள்ள உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ராகி தோசை, ராகி இட்லி போன்ற பயிறு தோசைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் இட்லி, தோசையுடன் பழங்கள் அல்லது காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளுவது அவசியம்.
மூன்று வேளை உணவிலும் பழங்கள், காய்கறிகளை சேர்ப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது எனவும் மருத்துவர் அருணாச்சலம் கூறுகிறார். மேலும், அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.