கலைஞர் கைவினைத் திட்டம் : தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Kalaignar Kaivinai Thittam : கலைஞர் கைவினைத் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Kalaignar Kaivinai Thittam : கலைஞர் கைவினைத் திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கும் நிலையில், அது குறித்து விரிவாக இங்கேதெரிந்து கொள்ளுங்கள்

 

1 /9

2023-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து 3 இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டமாண பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 

2 /9

இப்புதிய கைவினைஞர் நலத்திட்டம் தமிழ்நாடு அரசு கடைபிடித்து வரும் சமூக நீதிக் கோட்பாடுகளுக்கு எதிரான கூறுகளைக் கொண்டதாக இருப்பதை உணர்ந்து அதற்கு மாற்றாக அதனினும் மேம்பட்ட கலைஞர் கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம் (Kalaignar Kaivinai Thittam) வடிவமைத்து செயல்படுத்தப்படும் என்று 2024-2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.  

3 /9

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும் வகையில் அவர்களுக்கு நிதி உதவி, திறன் பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும் வகையில் தமிழ்நாடு அரசு 'கலைஞர் கைவினைத் திட்டம் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது

4 /9

சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் செயல்படுத்திட கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மரவேலைப்பாடுகள். படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்பவேலைப்பாடுகள். கண்ணாடி வேலைப்பாடுகள் செய்யக்கூடியவர்கள் பலனடையலாம். 

5 /9

மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டட வேலைகள். கூடை முடைதல், கயிறு மற்றும் பாய் பின்னுதல் உள்ளிட்ட 25 வகையாண தொழில் இனங்களுக்கு புதிய தொழில் அலகுகளை தொடங்குவதற்கு உதவி செய்யப்படுகிறது.  

6 /9

ஏற்கனவே உள்ள அலகுகளை நவீன வடிவில் விரிவாக்கம் செய்திடவும் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவேர் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிகாளர் நலவரியம் மூலம் வழங்கப்பட்டு, 25 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.50,000/- வரையிலும், வங்கிகடன் 3 இலட்சம் ரூபாய் மற்றும் 5 சதவீத வட்டி மானியத்துடன் அணைத்தும் உள்ளடக்கியதாக செயல்படுத்தப்படுகிறது. 

7 /9

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்புமிக்க கலைஞர் கைவிணைத் திட்டம் சனிக்கிழமை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

8 /9

8951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், கலைரும் கைவினைத் திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கைமிலான பயனாளிகளுக்கு கடன் வழங்கிய தாய்கோ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்தியன் வங்கி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கியளர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் பாராட்டு சாண்றிதழ்களையும் வழங்கினார்.

9 /9

அனைத்து மாவட்டத்தில் உள்ளவர்களும் இந்த திட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.