கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான 3 முக்கிய ஆவணங்கள்..!!

Kalaingar Magalir Urimai Thogai :  கலைஞர் மகளிர்  உரிமைத் தொகை  திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான மூன்று  முக்கிய ஆவணங்களை தெரிந்து கொள்ளுங்கள்

Kalaingar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசு ஜூன் 4 ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்ய உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான மிக  முக்கிய ஆவணங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

1 /8

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்க உள்ளது. நீண்ட நாட்களாக இந்த திட்டத்தில் சேர வேண்டும் என காத்திருந்த தமிழ்நாட்டு பெண்களுக்கு இந்த  அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 

2 /8

இதுநாள் வரை காத்திருந்தவர்கள் ஜூன் 4 ஆம் தேதிக்காக மிக ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஏனென்றால் அன்றைய நாளில் தான் தமிழ்நாடு முழுவதும் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.

3 /8

அன்றைய நாளில் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் இந்த சிறப்பு முகாமில் கலைஞர்  மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

4 /8

அதனால், இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்களும், ஏற்கனவே விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை  திட்டத்துக்கு ஜூன் 4 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.  

5 /8

ஆனால், இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க மூன்று முக்கிய ஆவணங்கள் கட்டாயம் தேவை. ரேஷன் கார்டு இருக்க வேண்டும். இந்த கார்டு இல்லையென்றால் கட்டாயம்  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.   

6 /8

உங்களிடம் ரேஷன் கார்டு இருக்கிறது என்றால், விண்ணப்பிப்பவரின் பெயரில் வங்கி கணக்கு இருக்க வேண்டும். வங்கி பாஸ்புக் நகலை விண்ணப்பிக்கும்போது கொடுக்க வேண்டும். 

7 /8

அதன்பிறகு ஆதார் கார்டு அவசியம் கொடுக்க வேண்டும். இதுதவிர வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை கூட ஆவணமாக கொடுக்கலாம். பாஸ்போர்ட் சைஸ்  புகைப்படம் அவசியம்.

8 /8

எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த ஆவணங்கள் தங்களிடம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தேவைப்படுவோருக்கு உதவு செய்யவும்.