Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு புதியவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு
Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு புதியவர்கள் ஜூன் மாதம் விண்ணப்பித்தால், எப்போது ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைகாதவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.
ஜூன் மாதம் நான்காம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாகவும், 9000 இடங்களில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சிறப்பு முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்களில் தகுதியானவர்களுக்கு நிச்சயமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதனால், கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க உங்களுக்கு தகுதி இருக்கிறதா? என்பதை இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் முன் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக்கூடாது, குடும்ப வருமானம் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது. ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்துபவர்களாக இருக்கக்கூடாது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களாக இருக்கக்கூடாது. எம்எல்ஏ, எம்.பி, ஊராட்சி மன்ற தலைவர் போன்ற மக்கள் பிரதிநிதி பதவிகளில் இருப்பவர்களாக இருக்ககூடாது.
நன்செய் நிலங்கள் 5 ஏக்கர், புன்செய் நிலங்கள் 10 ஏக்கருக்கும் மேல் வைத்திருப்பவர்களாக இருக்கக்கூடாது. ஒரு ரேஷன் கார்டுக்கு ஒருவருக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால், 2வதாக விண்ணப்பிப்பவரின் மனு நிராகரிக்கப்படும்.
முதியவர்கள் அரசின் வேறு துறைகளில் மாத உதவித் தொகை பெற்றாலும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
அப்படி, ஜூன் மாதம் விண்ணிப்பவர்களுக்கு எப்போது முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதிகபட்சம் திமுக தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட வாய்ப்பு இருகிறது.
அதற்கு முன்பாக செப்டம்பர் 15 ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாள் வருவதால் அந்த தேதியில் கூட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகலாம். எனவே இந்த திட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசிடமிருந்து குட்நியூஸ் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.