கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பம் குறித்து அரசின் புதிய அறிவிப்பு

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் எங்கு, எப்போது கிடைக்கும் என்பது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Kalaignar Magalir Urimai Thogai Applications : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் எங்கு, எப்போது கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். முழுமையான விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

1 /8

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முதல் விண்ணப்பம் வழங்கும் பணி ஜூலை 7 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 /8

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

3 /8

"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாம் வரும் 15 ஆம் தேதி தொடங்கும். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.

4 /8

இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும்.

5 /8

இந்த திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் அனைவரின் வீட்டிற்கும் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம், பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தகவல்களை வழங்கி கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.

6 /8

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் இந்த முகாம்களில் பங்கேற்று விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

7 /8

இத்திட்டம் குறித்த விபரங்களை சரியாக பெற பொதுமக்களுக்கு "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணியானது நாளை முதல் தொடங்க உள்ளது. 

8 /8

உங்களுடன் ஸ்டாலின் (Ungaludan Stalin) என்கிற திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.