Karur TVK Meeting Stampede: கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் மொத்தம் 39 பேர் உயிரிழந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் கதறி அழுதார்.
1/8கரூரில் வேலுச்சாமிபுரத்தில் நேற்றிரவு நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
2/8உயிரிழந்தவர்களில் 5 சிறுவன்கள், 5 சிறுமிகள், 17 பெண்கள், 12 ஆண்கள் அடக்கம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஹேமலதா, மகள்கள் சாய் லசஷனா, சாய் ஜீவா ஆகிய மூவரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
3/8மொத்தம் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உடல்கள் அனைத்தும் அரசு மருத்துவமனைக்கு வெளியே வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட காட்சிகள் மனதை உலுக்கியுள்ளன.
4/8அடையாளம் காணப்பட்டவர்களின் உடல்கள் இன்று நள்ளிரவிலேயே உடற்கூராய்வு செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிவாரணமும் இன்றே வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் அதிகாலையில் கரூர் வர இருக்கிறார்.
5/8கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தரப்பிலும் முழு வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.
6/8அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக கரூர் விரைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அங்கு சிகிச்சையில் இருந்தோரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
7/8அன்பில் மகேஷ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வெளியே வரும்போது, கண்ணீர்விட்டு அழும் காட்சிகள் பெரும் சோகத்தை உண்டாக்கின. செந்தில்பாலாஜி உள்ளிட்ட அங்கிருந்த பலரும் தங்களின் துயரத்தை வெளிப்படுத்தினர்.
8/8கரூர் விஜய் நிகழ்வில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 04324 256306, 7010806322 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு உதவிகள் கோரலாம்.