கொரோனா காலத்தில் Immunity -ஐ அள்ளிக் கொடுக்கும் வேம்பும் கற்றாழையும்..!!!

Mon, 19 Oct 2020-10:41 pm,

கொரோனாவின் காலத்தில், நீங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக வைத்திருக்க வேண்டும்.  மக்கள் பல மாதங்களாக தங்கள் வீடுகளில் சிறைப்பட்டுள்ளனர், இதன் காரணமாக அவர்களின் எடையும் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கற்றாழை மற்றும் வேப்பிலிருந்து தயாரிக்கப்படும் சாற்றைக் குடிக்கலாம். இது உங்கள் எடையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். இதன் மூலம், இந்த நச்சுகள் உங்கள் உடலில் இருந்து வெளியேறும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் அதை வீட்டில் எவ்வாறு தயாரிப்பது  என்பதை அறிந்து கொள்ளலாம்

 

கற்றாழை சருமத்தை பாதுகாத்து, ஒரு இரவு நேர எக்ஸ்போலியேட்டராக செயல்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதில் ஏராளமாகக் காணப்படுகின்றன, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

தோல், முடி சம்பந்தமான நோய் மட்டுமல்லாது பல நோய்களிலிருந்து விடுபடுவதற்கான பழமையான ஆயுர்வேத வைத்தியங்களில் ஒன்றாக வேம்பு,அதாவது வேப்பிலை கருதப்படுகிறது. இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

கற்றாழை அதாவது ஆலூ வேரா ( Aloe Vera), ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாகும், இதில் ஏராளமான அமினோ அமிலங்கள் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டுள்ளன. கற்றாழையில் வைட்டமின்கள் மட்டுமல்ல, பீட்டா கரோட்டினும் உள்ளது என தோல் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதை தயாரிக்க உங்களுக்கு 1 டீஸ்பூன் வேப்ப இலைகள், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1 கப் தண்ணீர் மற்றும் தேன் தேவை. வேப்பிலையையும் கற்றாழையையும் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, அதன் பின்  தேன் சேர்த்து உட்கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன்  காலி வயிற்றில் உட்கொண்ட்டால் சிறந்த பலன் கிடைக்கும். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link