பாலியல் துன்புறுத்தல்: மஞ்சுமல் பாய்ஸ் இயக்குநர் மீது பாய்ந்த வழக்கு!

Manjummel Boys: கடந்த 2024ஆம் ஆண்டு மஞ்சுமல் பாய்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது. 

 

Manjummel Boys Director Chidambaram Sexual Harassment Case: மஞ்சுமல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

1 /6

தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட்டான படம் மஞ்சுமல் பாய்ஸ். இப்படம் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியானது.   

2 /6

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுத்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 242 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   

3 /6

பதிவு செய்யப்பட்ட வழக்கில், கடந்த 2022ஆம் ஆண்டில் கொச்சியில் இருக்கும் ஒரு குடியிருப்பு பகுதியில் இயக்குநர் சிதம்பரம் அத்துமீறி நுழைந்து பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

4 /6

இயக்குநர் சிதம்பரம் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 354ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குநர் சிதம்பரம் எந்த பதிலும் அளிக்கவில்லை.   

5 /6

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், புகார்தாரரின் விரிவான வாக்குமூலத்தை பெற்ற பின்னரே இந்த வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார். மேலும், இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு இயக்குநர் சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.   

6 /6

முன்னதாக மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான செளபின் ஷாஹிர் நிதி மோசடி வழக்கில் கைதானது குறிப்பிடத்தக்கது.