போக்குவரத்து தொடர்பாக புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.
போக்குவரத்து விதி மீறல்களை குறைக்கும் விதமாக, ஓட்டுநர் உரிமங்களுக்கு நெகட்டிவ் பாய்ண்ட்ஸ் அடிப்படையிலான முறையை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது வேகம், சிவப்பு விளக்கை தாண்டுதல் உள்ளிட்ட விதிமீறகளை தடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்யப்படும். புதிய அமைப்பின் கீழ், ஓட்டுநர்கள் ஒவ்வொரு விதிமீறகளுக்கும் அபராத புள்ளிகளை பெறுவார்கள்.
அப்படி 12 புள்ளிகளை ஒருவர் அபராதமாக பெறும்போது, அவர் ஓராண்டு ஓட்டுநர் உரிம இடைநீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும்.
மீண்டும் மீண்டும் விதிகளை மீறுபவர்கள் 5 ஆண்டுகள் வரை தகுதி நீக்கம் செய்யப்படலாம். இந்த விதிமுறைகள் இரண்டு மாதங்களுக்குள் சட்டமாக உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஏஐ போன்ற நவீன தொழில்நுட்பங்களும் போக்குவரத்து விதிமீறலை கண்காணிக்க பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.