ருதுராஜ் கைகுவாட் காயம் காரணமாக இந்த ஆண்டு வெளியேறி உள்ள நிலையில், அடுத்த ஆண்டு புதிய கேப்டனை நியமிக்க சென்னை அணி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் சென்னை அணிக்கு எதுவுமே சாதகமாக அமையவில்லை. இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி எழுத்தில் உள்ளனர். கிட்டதட்ட பிளே ஆப்பில் இருந்து வெளியேறி உள்ளது.
பவுலிங்கில் நூர் அகமது மற்றும் கலீல் அகமது சிறப்பாக விளையாடியிருந்தாலும், பேட்டிங்கில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. மேலும் காயம் காரணமாக இந்த ஆண்டு ருதுராஜ் கைகுவாட் வெளியேறி உள்ளார்.
ருதுராஜ் கைகுவாட் பதிலாக தோனி இந்த ஆண்டு மீண்டும் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்நிலையில் அடுத்த ஆண்டு புதிய கேப்டனை நியமிக்கலாமா என்று சென்னை அணி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது ருதுராஜ் கைகுவாட்க்கு அதிக அழுத்தங்களை ஏற்படுத்துவதாக உள்ளது, எனவும் இதனால் அவரது பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த ஆண்டு ருதுராஜ் கைகுவாட்க்கு பதில் வேறொரு வீரரை கேப்டன் ஆக நியமிக்க அணி நிர்வாகமும் தோனியும் முடிவு செய்து இருப்பதாக சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ருதுராஜ் கைகுவாட் பதில் சிவம் துபேவை கேப்டனாக நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த இறுதி முடிவுகள் அடுத்த சீசன் தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.