Jai Shri Ram! கடவுள் ராமரின் படத்துடன் கூடிய பணத்தாள்கள் புழக்கத்தில்!

Sun, 01 Aug 2021-6:21 pm,

ராம் முத்ரா அக்டோபர் 2001 இல் மகரிஷி மகேஷ் யோகியுடன் இணைந்த லாப நோக்கற்ற அமைப்பான, உலக அமைதிக்கான உலகளாவிய நாடு (The Global Country of World Peace, GCWP) மூலம் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. 

இந்த ராம் முத்ரா மூலம், எந்த நபரும் தனது ஆசிரமத்திற்குள் பொருட்களை வாங்க முடியும். இருப்பினும், இந்த முத்ராவை ஆசிரமத்திற்குள் அல்லது ஆசிரமத்துடன் தொடர்புடைய உறுப்பினர்களிடையே மட்டுமே பயன்படுத்த முடியும். இதை ஆசிரமத்திற்கு வெளியே உள்ள மற்ற நகரங்களில் பயன்படுத்த முடியாது. 

GCWP இன் தலைமையகம் அயோவாவில் உள்ள மகரிஷி வேத நகரத்தில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு தனது இணையதளத்தில், 'வேத சிட்டி 24 பிப்ரவரி 2002 அன்று ராம் முத்ராவை விநியோகிக்கத் தொடங்கியது. நகரின் பொருளாதார வளர்ச்சிக்கும், உள்ளூர் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும், நகர சபை ராம் முத்ராவின் நடைமுறையை ஏற்றுக்கொண்டது. ராம் முத்ரா ஒன்றின் மதிப்பு 10 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டது.

2003 ஆம் ஆண்டில், 'ராம் முத்ரா' நெதர்லாந்தில் சுமார் 100 கடைகள், 30 கிராமங்கள் மற்றும் பல நகரங்களின் பகுதிகளில் செல்லுபடியானதாக அந்த காலத்தில் பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது.   

1, 5 மற்றும் 10 -ன் ராமர் பணத்தாள் அச்சிடப்பட்டது. நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் சில இடங்களில் நாணயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. eradicating poverty - வறுமையை ஒழிக்க நாணயம் உதவியாக இருக்கும் மகரிஷி இயக்கத்தின் நிதியமைச்சர் பெஞ்சமின் ஃபெல்ட்மேன், வறுமையை ஒழிக்க ராமர் உதவியாக இருப்பதை நிரூபிக்க முடியும் என்று கூறினார்.

ராம் முத்ரா பொதுவாக வேர்ட் பீஸ் பாண்ட் (Word Peace Bond) என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பாவில் இது 10 யூரோக்களுக்கு சமமாக இருந்தது. அதேசமயம் அமெரிக்காவில் அது 10 டாலராகிறது. சாந்தி மஹால்கள் கட்டுவதற்கு அந்த நாணயம் அமைப்பால் பயன்படுத்தப்பட்டது.

ராம் முத்ராவின் பரிவர்த்தனை 24 பிப்ரவரி 2002 முதல் தொடங்கியது என்று கூறப்படுகிறது. வேதிக் நகரத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சிக்காக, அமெரிக்க நகர சபை இந்த நாணயத்தை ஏற்றுக்கொண்டது ஆனால் அதற்கு சட்டப்பூர்வ ஒப்பந்தம் கொடுக்கவில்லை.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link