பழைய ஓய்வூதியம்: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளியான தகவல்!

Old Pension Scheme: தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி விரைவில் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

1 /6

தமிழகத்தில் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தான் அமலில் உள்ளது. மத்திய அரசு கடந்த 2023ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை  அறிமுகப்படுத்தியது. 

2 /6

ஆனால் இந்த திட்டத்தில் பல குறள்படிகள் இருப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

3 /6

பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தாலும், தமிழகத்தில் இந்த பிரச்சனை பெரிதானது. அதே சமயம் தேர்தல் நெருங்குவதால், இந்த ஆண்டுக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 

4 /6

அரசு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய குழுவும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ககந்தீப் சிங் பேடி தலையிலான குழு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

5 /6

அதன் பிறகு, பழைய ஓய்வூதியம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்றும், செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில், அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

6 /6

2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சம் அமல்படுத்துவார் என கூறப்படுகிறது.