ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் சுமார் 26 பேர் பலி ஆகி உள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 6 முதல் 8 பயங்காரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்று பயங்கரவாதிகளும் ஆசிஃப் ஃபௌஜி, சுலேமான் சா மற்றும் அபு தல்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தாக்குதல் குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) குழு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகல்காமை அடைந்தது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.