பிரதமர் முத்ரா திட்டம் (PMMY) : ரூ.20 லட்சம் கடன் பெறலாம்..!! - முழு விவரம்

பிரதமர் முத்ரா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர்கள் ரூ.20 லட்சம் கடன் பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

 

Rs. 20 Lakh Loan Under Mudra Yojana, Apply Now : சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்காக உருவாக்கப்பட்ட முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

பிரதமர் முத்ரா திட்டம் (PMMY) என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு (MSMEs) 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் இந்திய அரசின் முக்கிய திட்டமாகும். இது 8 ஏப்ரல் 2015-ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் நான்கு நிலைகளைக் கொண்டது

2 /6

சிசு (Shishu): ₹50,000 வரை (புதிய தொழில்முனைவோர்), கிஷோர் (Kishor): ₹50,001 முதல் ₹5 லட்சம் வரை, தருண் (Tarun): ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை, தருண் பிளஸ் (Tarun Plus): ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் (முன்பு கடனை நல்ல நிலையில் திருப்பி கட்டியவர்கள்).

3 /6

கடன் வட்டி விகிதம்: 7-12% (வங்கியைப் பொறுத்து), 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். 18-65 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

4 /6

சிறு கடைக்காரர்கள், கைவினைஞர்கள், சேவைத் துறையினர், பெண் தொழில்முனைவோர், SC/ST/OBC பிரிவினர், MSMEs, ஸ்டார்ட்அப்கள், சுயதொழில் செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

5 /6

ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அட்டை, லோன் விண்ணப்பிக்கும் நேரத்தில் கடந்த 6 மாத வங்கி அறிக்கை, தொழில் நிறுவனத்தின் முகவரிச் சான்று, புகைப்படம் ஆகிய ஆவணங்கள் கொடுக்க வேண்டும். 

6 /6

கடன் வேண்டும் என நினைப்பவர்கள் உதயம் மித்ரா போர்ட்டலில் (www.udyamimitra.in) ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். அதன்பின்னர், அருகிலுள்ள வங்கி/NBFC/MFI-ஐ அணுகவும். ஆவணங்களை சமர்ப்பித்து, கடனுக்கு ஒப்புதல் பெறவும்.