செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளின் தலைவிதி மாறும், ராஜயோகம் ஆரம்பம் ஆகும்

Published: Mar 18, 2025, 06:41 PM IST|Updated: Mar 18, 2025, 06:41 PM IST

Sevvai Peyarchi Palangal: ஏப்ரல் 3 ஆம் தேதி செவ்வாய் கடக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக நன்மைகள் யாருக்கு? செவ்வாய் பெயர்ச்சி பலன்களை இங்கே காணலாம்.

Sevvai Peyarchi Palangal: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்களது வாழ்வில் ராஜயோகம் ஆரம்பம் ஆகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sevvai Peyarchi1/10

செவ்வாய் பெயர்ச்சி

செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். இவர் வீரம், விவேகம், துணிச்சல், நிலம், வீடு ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார்.

Sevvai Peyarchi2/10

செவ்வாய் பெயர்ச்சி

செவ்வாய் தற்போது மிதுன ராசியில் உள்ளார். ஏப்ரல் 3 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். இது ஏப்ரல் மாதத்தின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

 

Sevvai Peyarchi Palangal3/10

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்களது வாழ்வில் பொற்காலம் தொடங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Aries4/10

மேஷம்

மேஷம்: செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். பொருளாதார நிலைமை மேம்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் அருளால் தன்னம்பிக்கையும், ஆன்மீக பணிகளில் நாட்டமும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுடன் சம்பள உயர்வின் பலனைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.

Virgo5/10

கன்னி

கன்னி: செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றத்தால், கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய விடியல் ஏற்படும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து, நிதி ஆதாயம் பெற வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இருப்பினும், உங்கள் கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ராஜவாழ்க்கை வாழ்வீர்கள். துர்கா தேவியின் ஆசிகளைப் பெற துர்கை அம்மனின் ஸ்தோத்திரங்களை சொல்வது நல்லது.

Libra6/10

துலாம்

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் ஆசிகள் பொழியும். அவருடைய ஆசீர்வாதத்தால், பணம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்மை ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் திட்டங்கள் நிறைவேறும். திடீர் நிதி ஆதாயம் ஏற்படும். உங்கள் கடின உழைப்பால் குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பீர்கள். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

Capriocorn7/10

மகரம்

மகரம்: கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்கள் மார்ச் 29 அன்று சனி பகவானின் ராசி மாற்றத்தால் ஏழரை சனியிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். மகர ராசிக்காரர்கள் மீது செவ்வாய் பகவானின் ஆசிகள் பொழியும். அவருடைய அருளால், வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும். மேலும், தொழில் மற்றும் வணிகம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். சனி மற்றும் செவ்வாயின் ஆசிகளைப் பெற, சனிக்கிழமைகளில் ஹனுமான் சாலிசா சொல்வது நல்லது. மேலும், சிவபெருமானுக்கு தேனால் அபிஷேகம் செய்வதும் நன்மை பயக்கும்.

Pisces8/10

மீனம்

மீனம்: செவ்வாய் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்களை அளிக்கும். அலுவலக பணிகளில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு திடீர் நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. முதலீடு அல்லது வணிகத் திட்டமிடலுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். முதலீடு அல்லது சொத்து தொடர்பான முடிவுகள் உங்களுக்கு நன்மை பயக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வேகமெடுக்கும்.

Mangal Gochar9/10

செவ்வாய் கிரகத்தின் அருள் பெற

செவ்வாய் கிரகத்தின் அருள் பெற, 'ஓம் வீரத்வஜாய வித்மஹே, விக்ன ஹஸ்தாய தீமஹி, தந்நோ பௌம: ப்ரசோதயாத்' என்ற அங்காரக காயத்ரியை தினமும் பாராயணம் செய்வது நல்லது.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.