ராகு பகவானின் கடும் கோபத்திற்கு ஆளாகும் 5 ராசிகள்.. தப்பிக்க செய்ய வேண்டியது என்ன? முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமான ராகுவுக்கு, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்களும் பரம எதிரிகளாகும். இதுபோக செவ்வாய் கிரகத்துடனும் ராகுவுக்கு பகை உள்ளதால், இந்த கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள 5 ராசிகள் ராகுவின் பகை ராசிகளாக கருதப்படுகின்றன.
செவ்வாய் பகவான் ஆட்சி செய்யும் மேஷ ராசியில் ராகு அமரும் போது, ஜாதகருக்கு கடுமையான கோபமும், பதற்றமும் ஏற்படும். அவசரத்தில் எடுக்கும் முடிவுகளால் தவறான பாதையில் செல்வதோடு, விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
ராகுவின் பரம எதிரியான சந்திரன் ஆளும் கடக ராசியில் ராகு அமர்ந்தால், அந்த ராசிக்காரர்களுக்கு மனரீதியான குழப்பங்கள், தேவையற்ற பயம் மற்றும் மன அமைதியின்மை உண்டாகும்.
சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியில் ராகு அமரும்போது பிதுர் தோஷம் ஏற்படும் அமைப்புகள் உருவாகலாம். இதனால் தந்தை-மகன் உறவில் விரிசல், கௌரவக் குறைச்சல் மற்றும் அரசு வழியில் பல தடைகள் ஏற்படக்கூடும்.
விருச்சிக ராசியில் ராகு பகவான் நீச்சம் அடைவதால் அங்கு அவரது வலிமை குறையும். இதனால் தேவையற்ற கோபம், பகை மற்றும் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
குரு பகவான் ஆட்சி செய்யும் தனுசு ராசியில் ராகு அமர்வது சண்டாள யோகத்தை உருவாக்கும். இதனால் கடின உழைப்புக்கான பலன் தாமதமாவதுடன், சமூகத்தில் அதிர்ஷ்டத்தையும் குடும்ப ஆதரவையும் இழக்க நேரிடலாம்.