ராகு கேது பெயர்ச்சி 2025: எப்போதும் பின்னோக்கி சுற்றும் கிரகங்களான ராகு கேது வரும் மே மாதத்தில் பெயர்ச்சியாக உள்ளன. இதனால் சில ராசிகளுக்கு பெரிய அளவில் நன்மைகள் ஏற்படும் எனவும், இதனால் வாழ்க்கையில் அற்புதமான விடியலை பெறுவார்கள் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
நவகிரகங்களில் பாவ கிரகம் அல்லது சர்ப்ப கிரகமாக கருதப்படும் ராகு கேது வரும் மே மாதத்தில், அதாவது வைகாசி மாதத்தில் பெயர்ச்சி அடைகின்றன. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாத காலத்தை எடுத்துக் கொள்ளும் ராகு கேதுவின் பெயர்ச்சி, சனி மற்றும் குரு பெயர்ச்சியைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தது.
ராகு கேது பெயர்ச்சி 2025: வரும் மே மாதம் 18ஆம் தேதி,ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகின்றன, இதனால், வாழ்க்கையில் கோடி நன்மைகளைப் பெற்று, வாழ்க்கையில் நல்ல விடியலை சந்திக்கப் போகும் 5 ராசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ராகு கேது எப்போதும் வக்கிர நிலையில் தான் பெயர்ச்சியாகின்றன. இந்த இரு கிரகங்களின் பெயர்ச்சிகளும், அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிகள் அடுத்த 18 மாதங்களுக்கு எதிர்பாராத பலன்களைப் பெறப் போகிறார்கள். ராகு கேது பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசியினர் திட்டமிட்ட வேலைகள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். நீண்ட காலமாக இருந்து வந்த தடைகளும் நீங்கும். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்து, உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும், வீட்டின் நிதி நிலைமை மேம்படும். வருமானமும் அதிகரிக்கக்கூடும்.
கடக ராசியினருக்கு ராகுவின் அருளால், எதிர்பார்க்காத இடத்திலிருந்து திடீரென்று பணம் கிடைக்கக்கூடும். ஆன்மீக நடவடிக்கைகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கக்கூடும். திடீரென்று ஒரு வீடு மனை போன்ற சொத்தை வாங்கலாம், அது லாபகரமாக இருக்கும். குடும்ப விஷயங்களில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும், திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு, ராகு கேது பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும் என்று கருதப்படுகிறது. நீண்ட காலமாக வாட்டி வந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் மிக எளிதாக தீர்க்க முடியும். முன்பு செய்த முதலீடுகள் இப்போது உங்களுக்குப் பயனளிக்கும். நிதி நிலைமையும் மேம்படும்.
துலாம் ராசியினர் ராகு கேது அருளால், வாழ்க்கையில் சில நேர்மறையான மாற்றங்களைக் காணலாம். படிக்கும் மாணவர்களுக்கு கல்வித் துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். உங்கள் அறிவுத் திறன் மேம்படும். நினைவில் வைத்திருக்கும் திறன் அதிகரிக்கும். நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்தால், அதில் லாபம் ஈட்டலாம்.
தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பெரிய வெற்றிப் பாதைகள் திறக்கும். உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டம் அல்லது எந்தவொரு புதிய வேலையையும் தொடங்குவதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். உங்கள் மன தைரியமும் அதிகரிக்கும். பண வரவு மகிழ்ச்சியை கொடுக்கும். பொருளாதார நிலை மேம்படும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.