SIP Investment Tips: SIP மூலம் முயூச்சுவல் ஃபண்டுகளின் மூலம் ஆயிரங்களை எளிதில் கோடிகளாக்கலாம் என்பதால், இதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. SIP முதலீடு சந்தை நிலையைப் பொறுத்தது என்றாலும், நீண்ட கால முதலீட்டில் நல்ல வருமானம் கொடுப்பதே இதற்கு காரணம்.
SIP முதலீட்டின் மூலம் 50 வயதிலேயே கோடீஸ்வரராக விரும்பினால், முதலீடு செய்ய 10+15+25 சூத்திரத்தை கடைபிடிப்பது மேஜிக் வருமானத்தை கொடுக்கும். சரியான நேரத்தில் SIP திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கினால், 25 ஆண்டுகளில் கோடீஸ்வரராகி விடலாம்.
SIP மூலம் ஓய்வு காலத்திற்கான நிதியை உருவாக்க விரும்பினால், சரியான சூத்திரத்தைப் பின்பற்றுவது சிறந்த வழி. இதில், நீங்கள் 10+15+25 என்ற சூத்திரத்தை கடைபிடித்து SIP முதலீடு செய்தால், எதிர்காலத்தில் குறைந்தபட்சம் ரூ. 2 கோடி மதிப்புள்ள வலுவான நிதியைப் பெறுவீர்கள். இந்த நிதியுடன், ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கை நடத்துவதைப்பற்றியும் செலவுகளைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
SIP முதலீடு செய்வதற்கான திட்டமிடலில் 10+15+25 என்ற சூத்திரத்தைப் பின்பற்றினால், எவ்வளவு காலத்திற்கு எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டும், பிறகு எத்தனை ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரராக முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம், 50 வயதிலேயே 2 கோடிக்கும் அதிகமாக பணம் சேர்க்கலாம். 10+15+25 என்ற சூத்திரம் 10,000 மாத முதலீட்டை 25 ஆண்டுகளுக்கு தொடரும் நிலையில், 15 சதவிகித ஆண்டு வருமானம் கிடைப்பதைக் குறிக்கிறது.
உங்களுக்கு இப்போது 25 வயது என வைத்துக் கொள்வோம், 50 வயதிற்குள் உங்களுக்காக ஒரு வலுவான நிதியை விரும்பினால், நீங்கள் மாதம் ரூ.10,000 SIP முதலீட்டை தொடங்கலாம். நீங்கள் 25 வயதில் ரூ.10,000 SIP தொடங்கினால், 50 வயதில், அதாவது 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2 கோடி வரை நிதியை உருவாக்கலாம்.
நீங்கள் இப்போது 25 வயதாக இருந்து, SIP முறையில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால், இந்த முதலீட்டில் 15 சதவீதம் வரை வருமானத்தை எளிதாகப் பெறலாம். நீண்ட கால தொடர் முதலீட்டில், முதலீட்டிற்கான ஆண்டு சராசரி வருமானம் 12% முதல் 15% வரை இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் உறுதி கூறுகின்றனர்.
நீங்கள் 25 ஆண்டுகளுக்கு ரூ.10,000 முதலீடு செய்தால், மொத்த முதலீட்டுத் தொகை ₹30,00,000 ஆக இருக்கும். இதில், உங்களுக்கு ஆண்டு சராசரி வருமானம் 15 சதவீதம் என்ற அளவில் இருந்தால் ₹2,45,65,608, அதாவது சுமார் 2.4 கோடி மூலதன ஆதாயம் கிடைக்கும்.
முதலீடு மற்றும் வருவாய் தொகையைச் சேர்த்தால், மொத்த நிதி ₹2,75,65,608 ஆக இருக்கும். அதாவது, உங்களுக்கு 50 வயதாகும் போது, நீங்கள் சுமார் 2.75 கோடி ரூபாய்க்கு உரிமையாளராக இருப்பீர்கள். இதில் வருமானம் சிறிது குறைந்தால் கூட ரூ.2 கோடி உங்களுக்கு கிடைக்கும் என கூறலாம்.
ரூ.10,000 முதலீட்டில் 12% வருமானம் கிடைத்தால் கூட, 25 ஆண்டுகளுக்கு ரூ.10,000 முதலீடு செய்தால், முதலீட்டுத் தொகை ரூ.30,00,000 ஆக இருக்கும். இதில், 12 சதவீத வருமானம் தரும் நிதி ₹ 1,40,22,066 ஆக இருக்கும். இதன்படி, உங்கள் மொத்த நிதி ₹ 1,70,22,066 ஆக இருக்கும் அதாவது 1.7 கோடிக்கு உரிமையாளராக இருப்பீர்கள்.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.