Sukran Peyarchi: ஏப்ரல் 13 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள 5 ராசிகள் எவை? உங்கள் ராசியும் இதில் உள்ளதா?
Sukran Peyarchi Palangal: சுக்கிரன், பேச்சாற்றல், அறிவாற்றல், அழகு, செல்வம், செழிப்பு, உலக இன்பங்கள் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார். சுக்கிரன் சில நாட்களுக்கு முன்னர் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர, கிரகங்கள் நட்சத்திர பெயர்ச்சி, வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் ஆகிய மாற்றங்களையும் மேற்கொள்கின்றன.
சுக்கிரன், பேச்சாற்றல், அறிவாற்றல், அழகு, செல்வம், செழிப்பு, உலக இன்பங்கள் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
ஏப்ரல் 13 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். இதனால் அடுத்த 45 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில் இந்த நாட்களில் லட்சுமி நாராயண யோகமும் மாளவ்ய ராஜ்யோகமும் உருவாகும்.
சுக்கிரன் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் இது ஒரு பொற்காலமாய் திகழும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அதிக நன்மைகளை அளிக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். நிதி ரீதியாக, இந்தக் காலம் அற்புதமாக இருக்கும். மேலும் முதலீடுகளிலிருந்து நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் அழகும் கவர்ச்சியும் அதிகரிக்கும்.
கன்னி: சுக்கிரன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும். அலுவலகத்தில் உங்கள் யோசனைகளும் கருத்துகளும் பாராட்டப்படும். இந்த காலத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலை, இசை, எழுத்து அல்லது படைப்புத் துறையில் உள்ளவர்களுக்கு இந்த நேரத்தில் சிறப்பு அங்கீகாரம் கிடைக்கக்கூடும். உறவுகளில் ஸ்திரத்தன்மை இருக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும் நல்லிணக்கமும் அதிகரிக்கும்.
துலாம்: துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்தப் பெயர்ச்சியின் போது, துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் காணப்படும். திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும். உங்கள் சமூக கௌரவம் அதிகரிக்கும். பயணம் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் அமைதி இருக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு, சுக்கிரன் பெயர்ச்சி தொழில் மற்றும் நிதித் துறையில் புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரும். வியாபாரிகளுக்கு இந்த நேரம் முதலீடு மற்றும் புதிய ஒப்பந்தங்களுக்கு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். சுக்கிரன் அருளால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி ஆன்மீகத்தில் நாட்டத்தை அதிகரிக்கும். வாழ்வில் திருப்தி இருக்கும். உங்கள் படைப்பாற்றல் மேம்படும். மேலும் உங்கள் வேலையால் மக்களைக் கவர்வீர்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகை மீண்டும் கிடைக்கும். பண வரவு அதிகமாகும்.
அறிவாற்றல், பேச்சாற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கவும், வாழ்க்கையில் பல வித வெற்றிகளைப் பெறவும் சுக்கிரனை வணங்கலாம். சுக்கிரன் அருள் பெற, ‘ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும் ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்’ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்வது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.