சிஎஸ்கே-வின் புதிய பயிற்சியாளர் இவரா? காத்திருக்கும் குட் நியூஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் செல்ல வரும் அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும். 

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விலையாடி வருகிறது. விளையாடிய 8 போட்டியில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

 

1 /6

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் 7 போட்டிகளில் விளையாடிவிட்டது. 

2 /6

எப்போது இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக விளையாடி வருகிறது. விளையாடிய 8 போட்டிகளில் 6ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.   

3 /6

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக பிளமிங் செயல்பட்டு வருகிறார். 2020, 2022 மற்றும் 2024 ஆகிய மூன்று ஆண்டுகளை தவிர அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. முதல் முறையாக சென்னை அணி தொடர்ந்து இரண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத சூழல் ஏற்பட்டுள்ளது.   

4 /6

இதனால் ரசிகர்கள் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். யுக்திகளை மாற்றாமல் சென்னை அணி இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே பாடி வருகிறது. எனவே சென்னை அணி புதிய யுக்திகளை கையாள வேண்டும் என்றும் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.   

5 /6

இந்த நிலையில், சென்னை அணிக்கு புதிய பயிற்சியாளராக முன்னாள் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னாவை நியமிக்க வேண்டும் என்றும் தோனி ஓய்வு பெற்றுவிட்டு அவர் அணியின் மென்டாராக வர வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

6 /6

நடப்பாண்டு செய்த தவறை வரும் ஐபிஎல் தொடர்களில் சென்னை அணி செய்ய கூடாது என்பதுதான் ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.