Tamil Nadu Government: வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக உங்களது கருத்துகளை தமிழ்நாடு அரசு வரவேற்பதாக அறிவித்துள்ளது.
மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் மற்றும் மார்ச் 15ஆம் தேதி வேளான் பட்ஜெட்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கையை (Tamil Nadu Budget 2025) நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (TN Finance Minister Thangam Thennarasu) வரும் மார்ச் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
மேலும், முதல்முறையாக பட்ஜெட் உடன் பொருளாதார ஆய்வறிக்கையும் (Economic Survey) தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டை முன்னிட்டு பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள், அமைப்புகளிடம் இருந்தும் நிதித்துறை அதிகாரிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் (Tamil Nadu Agriculture Budget 2025) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் (Agriculture Minister MRK Panneerselvam) தாக்கல் செய்வார்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
இதன்மூலம், வேளாண் பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டிய திட்டம் குறித்து உங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் செயலி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் கூறலாம்.
tnagribudget2025@gmail.com என்ற மின்னெஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை அனுப்பலாம். அதுமட்டுமின்றி பிளே-ஸ்டோரில் இருந்து உழவர் செயலியை பதிவேறக்கம் செய்து அதிலும் நீங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தனியாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், இதுதான் திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் பலருக்கும் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.