TN Government Employees DA Hike: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை இன்னும் தமிழ்நாடு அரசு அறிவிக்காத நிலையில், இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tamil Nadu Government: மத்திய அரசு அதன் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த பின்னர், மாநில அரசுகளும் அதன் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது.
மத்திய அரசு அதன் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை (DA Hike) சமீபத்தில் அறிவித்தது. கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை - டிசம்பர் கட்டத்தில் அரசு ஊழயிர்களின் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து, 2025 ஜனவரியில் இருந்து மேலும் 2% அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மார்ச் மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம், அகவிலைப்படி 55% ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
இதன்மூலம், மத்திய அரசின் லட்சக்கணக்கான ஊழியர்களின் சம்பளம் உயரும். மத்திய அரசின் நிலை 1 ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரம் ஆகும் (7th Pay Commission). இதில் தற்போது 2% உயர்ந்திருப்பதால் சம்பளத்தில் 360 ரூபாய் அதிகரிக்கும்.
ஜனவரி - மார்ச் மாதம் வரையிலான அரியர் தொகையும் அளிக்கப்படும். அதாவது 1080 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விரைவில் அகவிலைப்படி உயர்வு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
வழக்கமாக மத்திய அரசு எந்தளவிற்கு அகவிலைப்படியை உயர்த்துகிறதோ, அதே அளவில்தான் மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தும். ஆனால், தமிழ்நாடு முதல்வர் இதில் மாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகிறது.
அதாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதது போன்ற சில விவகாரங்களில் தற்போதைய திமுக அரசு மீது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஊழியர்களை காட்டினாலும் அதிகமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, 2% காட்டிலும் அதிகமாக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதன்மூலம், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வை விட தமிழ்நாடு கூடுதலாக அறிவிப்பதன் மூலம், அரசு ஊழியர்களின் அதிருப்தியை ஓரளவுக்கு குறைக்கலாம் எனவும் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.