தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு எப்போது? ஸ்டாலினின் ஐடியா என்ன?

TN Government Employees DA Hike: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை இன்னும் தமிழ்நாடு அரசு அறிவிக்காத நிலையில், இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tamil Nadu Government: மத்திய அரசு அதன் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த பின்னர், மாநில அரசுகளும் அதன் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது.

1 /8

மத்திய அரசு அதன் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை (DA Hike) சமீபத்தில் அறிவித்தது. கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை - டிசம்பர் கட்டத்தில் அரசு ஊழயிர்களின் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டது.  

2 /8

தொடர்ந்து, 2025 ஜனவரியில் இருந்து மேலும் 2% அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மார்ச் மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம், அகவிலைப்படி 55% ஆக அதிகரிக்கப்பட உள்ளது.  

3 /8

இதன்மூலம், மத்திய அரசின் லட்சக்கணக்கான ஊழியர்களின் சம்பளம் உயரும். மத்திய அரசின் நிலை 1 ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரம் ஆகும் (7th Pay Commission). இதில் தற்போது 2% உயர்ந்திருப்பதால் சம்பளத்தில் 360 ரூபாய் அதிகரிக்கும்.  

4 /8

ஜனவரி - மார்ச் மாதம் வரையிலான அரியர் தொகையும் அளிக்கப்படும். அதாவது 1080 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விரைவில் அகவிலைப்படி உயர்வு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.    

5 /8

வழக்கமாக மத்திய அரசு எந்தளவிற்கு அகவிலைப்படியை உயர்த்துகிறதோ, அதே அளவில்தான் மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தும். ஆனால், தமிழ்நாடு முதல்வர் இதில் மாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகிறது.   

6 /8

அதாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதது போன்ற சில விவகாரங்களில் தற்போதைய திமுக அரசு மீது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.   

7 /8

எனவே, இந்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஊழியர்களை காட்டினாலும் அதிகமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, 2% காட்டிலும் அதிகமாக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.   

8 /8

இதன்மூலம், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வை விட தமிழ்நாடு கூடுதலாக அறிவிப்பதன் மூலம், அரசு ஊழியர்களின் அதிருப்தியை ஓரளவுக்கு குறைக்கலாம் எனவும் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.