தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ.50 ஆயிரம்... நலிவடைந்த பெண்களுக்கு ஸ்பெஷல் திட்டம்!

Tamil Nadu Government: நலிவடைந்த பெண்கள் சுய தொழில் தொடங்க திறன் பயிற்சியும், மானியமும் தமிழ்நாடு அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பு குறித்து இங்கு விரிவாக காணலாம்.

1 /8

தமிழ்நாடு அரசு பெண்கள் நலம் சார்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimmai Thittam), புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

2 /8

1 கோடி 14 லட்சம் குடும்ப தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் (Pudhumai Penn Thittam) உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.   

3 /8

இதேபோல், ஆதரவற்ற பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் செயல்படுகிறது.  

4 /8

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளைக் களைந்து இவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே இந்த நலவாரியத்தின் நோக்கமாகும்.  

5 /8

18 வயதுக்கு மேல் உள்ள கைம்பெண்கள், ஆதரவற்ற/நலிவற்ற பெண்கள் மற்றும் முதிர்கன்னிகள் ஆகியோர் இந்த வாரியத்தில் உறுப்பினராகலாம். 

6 /8

இந்த வாரியத்தின் கீழ் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு இரண்டு வகையான உதவிகள் தமிழ்நாடு அரசு செய்கிறது. இதுகுறித்து இங்கு காணலாம். 

7 /8

மேலும், திறன் பயிற்சியும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம தொழில் சம்பந்தமான திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன்மூலம் வாரியத்தின் உறுப்பினரான பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் தொடங்கி வழிவகை செய்யப்படும். 

8 /8

சுய தொழில் செய்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. அதாவது இந்த வாரியத்தின் உறுப்பினர்களுக்கு சுயதொழில் செய்வதற்கு வங்கிக் கடனில் உறுப்பினரின் பங்குத் தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.