Tamil Nadu Government Latest News: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலைகள் குறித்து தமிழக அரசு புதிய உத்தரவை போட்டுள்ளது.
Free Dhoti And Saree Latest News: தமிழ்நாட்டில் நியாயவிலை கடைகளில் மார்ச் 31 வரை வேட்டி, சேலையை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அர அறிவிப்பு.
பொங்கல் வேட்டி, சேலைகளை இதுவரை வாங்காதவர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி குடும்பங்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்புடன் கூடிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட்டது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை சேர்த்து வழங்கப்பட்டது.
1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் எண்ணிக்கையிலான வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் எண்ணிக்கையிலான சேலைகள் நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் பணி நடைபெற்றது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தின் மூலம் ரூ.249.76 கோடி செலவில் 2 கோடியே 20 லட்சத்து 94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது.