டாஸ்மாக்கில் ரூ.2,489 கோடி கூடுதல் வருமானம்... பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு!

TASMAC: கடந்தாண்டு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு 2 ஆயிரத்து 489  கோடி ரூபாய் கூடுதல் வருமானம் வந்துள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர்களின் மாத சம்பளத்தில் ரூ.2 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

Tamil Nadu Government: கடந்த 2021-22, 2022-23, 2023-24, 2024-25 ஆகிய நான்கு நிதியாண்டுகளில் டாஸ்மாக் மூலம் தமிழ்நாடு அரசுக்கு வந்த வருவாய் விவரம் மற்றும் டாஸ்மாக்கில் தொகுப்பூதிய முறையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை இதில் தெரிந்துகொள்ளலாம்.

1 /8

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2025 - 2026 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் கலால் வரி, ஆயத்தீர்வை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது.  

2 /8

இந்நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் டாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.  

3 /8

தமிழகத்தில் மது விற்பனை செய்யும் அரசு நிறுவமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு (TASMAC) கடந்த 2024 – 2025ஆம் நிதியாண்டில் 48 ஆயிரத்து 344 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

4 /8

டாஸ்மாக் மூலம் 2021 – 2022ஆம் நிதியாண்டில் 36,050 கோடி ரூபாயும், 2022 – 2023ஆம் நிதியாண்டில் 44,121 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசுக்கு (Tamil Nadu Government) வருவாய் வந்துள்ளது. 2021-22 ஆண்டைவிட சுமார் ரூ. 8 ஆயிரம் கோடிக்கும் மேல் வருவாய் உயர்ந்துள்ளது. கோவிட் காலகட்டம் என்பதால் 2021-22ஆம் ஆண்டில் வருவாய் குறைவாக இருந்தது.   

5 /8

2023 – 2024ஆம் நிதியாண்டில் 45,855 கோடி ரூபாயாக டாஸ்மாக் வருவாய் உயர்ந்தது. 2024 – 2025ஆம் நிதியாண்டில் 48,344 கோடி ரூபாயாக வருவாய் கிடைத்துள்ளது.   

6 /8

இதன்படி 2023 – 2024ஆம் நிதியாண்டை விட, 2024 – 2025ஆம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 489  கோடி ரூபாய் கூடுதல் வருவாய் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்துள்ளது.  

7 /8

இந்நிலையில், டாஸ்மாக் ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.2,000 உயர்ந்தப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு ஏப். 1ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது. இதனால் ரூ. 64.08 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும்.  

8 /8

டாஸ்மாக்கில் 6,567 மேற்பார்வையாளர்கள்; 14,636 விற்பனையாளர்கள; 2,426 உதவி விற்பனையாளர்கள் ஆக மொத்தம் 23 ஆயிரத்து 629 டாஸ்மாக் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்று வருவது குறிப்பிடத்தக்கது.