காப்பீட்டுத் துறையில் முக்கிய மாற்றம்: 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்!

Cabinet Clears 100 Percent FDI In Insurance : காப்பீட்டுத்துறையில் புதிய மாற்றத்தை மத்திய அமைச்சரவை கொண்டு வந்துள்ளது. இது, காப்பீட்டுதுறையை வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

Cabinet Clears 100 Percent FDI In Insurance :காப்பீட்டுத்துறையில், அன்னிய நேர முதலீட்டு வரம்பினை (FDI) 74% இருந்து, 100%ஆக உயர்த்துவதாக, நிர்மலா சீதாராமன் முன்னர் அறிவித்திருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அமைச்சரவை குழு, ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தினை, இங்கு பார்ப்போம்.

1 /7

காப்பீட்டுத்துறைக்கான FDI வரம்பானது, 100 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனவும், ஆனால் இந்தியாவிற்குள் முழு பிரீமியத்தையும் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பின் போது தெரிவித்திருந்தார். 

2 /7

வெளிநாட்டு முதலீட்டினை நிர்வகிக்கும் தற்போதைய பாதுகாப்பு மற்றும் நிபந்தனைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு எளிமைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இன்சூரன்ஸ் துறையில் கொண்டு வரப்பட்ட இந்த சீர்திருத்தமானது, நாட்டுக்குள் பல்வேறு வெளிநாட்டு மூலதனத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

3 /7

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், வெள்ளிக்கிழமையான இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இதில், காப்பீட்டு நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) 100 சதவீதமாக உயர்த்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

4 /7

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 19ஆம் தேதி முடிவுக்கு வரும் குளிர்கால கூட்டத்தொடரில், அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100%ஆக உயர்த்துவது குறித்தான மசோதா நிறைவேற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

5 /7

மக்களவை அறிக்கையின்படி, காப்பீட்டுத்துறையின் பயன்பாட்டை அதிகப்படுத்த, வளர்ச்சி மற்றும் அதன் மேம்பாட்டை அதிகரிக்கவும் வரவிருக்கும் நாடாளுமன்ர கூட்டத்தொடரில், இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்படலாம். 

6 /7

இதுவரை, காப்பீட்டுத்துறை FDI மூலம், ரூ.82,000 கோடியை ஈர்த்திருக்கிறதாம். காப்பீட்டுத்துறையில், அந்நிய நேரடி முதலீட்டை 100% உயர்த்துவதால், செலுத்தப்பட்ட மூலதனத்தை குறைக்க முடியும். அதே போல, 1938ன் காப்பீட்டு சட்டத்தின் பல்வேறு திருத்தங்களை நிறைவேற்றவும் நிதி அமைச்சகம் முன்வந்துள்ளது. 

7 /7

மத்திய அமைச்சகத்தின் இந்த புதிய முடிவு, காப்பீட்டு சந்தையில், வாடிக்கையாளர்கள் சேவைகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அடுத்தடுத்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.