Diwali 2025: வரும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் (அக். 21) தமிழ்நாடு அரசு, விடுமுறை அறிவிக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Diwali 2025 Government Holiday: தமிழ்நாட்டில் தீபாவளி அக். 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.அக். 21ஆம் தேதி அன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை அக். 20ஆம் தேதி மட்டும்தான் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை (Diwali 2025) நெருங்கிவிட்டது. வரும் அக். 20ஆம் தேதி தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது. இன்னும் சில மாநிலங்களில் அக். 21ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும்.
இனிப்புகள், பலகாரங்கள், பட்டாசுகள், புத்தாடைகள், புதிய திரைப்படங்கள் என தீபாவளி கொண்டாட்டங்களுக்கும் மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்தாண்டு தீபாவளி அக்.20ஆம் தேதி அதாவது திங்கட்கிழமையில் வந்துள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் சந்தோஷத்தில் இருப்பார்கள்.
ஞாயிறு விடுமுறையுடன் திங்கட்கிழமையிலும் விடுமுறை என்பதால் தொடர்ந்து இரண்டு நாள்கள் விடுமுறை கிடைப்பதே காரணம். மாதத்தின் 3வது சனிக்கிழமை என்றாலும் கூட சில இடங்களில் விடுமுறைக்கு வாய்ப்புள்ளது.
மாணவர்களுக்கு இப்படி என்றால், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஒரு பக்கம் கவலையும் இருக்கிறது. அதாவது, திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை முடித்து எப்படி அடுத்த நாளே சொந்த ஊருக்கு திரும்புவது என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது.
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு பலரும் சொந்த ஊர் சென்றிருப்பார்கள். அவர்கள் அடுத்து ஊர் திரும்ப வேண்டுமென்றால் திங்கட்கிழமை தீபாவளி அன்றே இரவு புறப்பட வேண்டும். இதனால், அனைவரும் ஒரே நாளில் கிளம்புவார்கள் என்பதால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதேநேரத்தில், தீபாவளி நாளில் கூட பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, ஞாயிறு (அக். 20), திங்கள் (அக். 21) விடுமுறையுடன் செவ்வாய் (அக். 22) அன்றும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும், சனிக்கிழமைகளிலும் பலர் விடுமுறை எடுக்க வாய்ப்புள்ளது என்பதால் நான்கு நாள்கள் தொடர் விடுமுறையாக அது அமைந்துவிடும். மேலும், செவ்வாய்கிழமையில் விடுமுறை அறிவித்தால் ஏதாவது ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகவும் அரசு அறிவிக்கலாம்.
இதேபோல், பலமுறை பண்டிகை காலகட்டத்தில் மக்கள் கோரிக்கையை ஏற்று அரசும் ஒரு நாள் கூடுதல் விடுமுறை அறிவித்திருக்கிறது. அந்த வகையில், இந்த முறை தீபாவளியை ஒட்டி கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அறிவிக்குமா என எதிர்பார்ப்பு மக்களுக்கு உள்ளது.