Puducherry முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 9, 2021, 10:55 PM IST
  • புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி
  • சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார்
  • தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளும்படி அவர் கேட்டு கொண்டுள்ளார்
Puducherry முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி title=

புதுச்சேரி: நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினசரி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அருகில் இருக்கும் புதுச்சேரியிலும் கோவிட் நோய் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா பாதிப்பால் தற்போது அன்றாடம் 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. 

அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே வருகிறது. புதுச்சேரியில் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Also Read | தமிழகத்தில் இன்று (மே,09) 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு, பலி 236   

மக்களுக்கு மட்டுமல்ல, புதுச்சேரியில் இரு தினங்களுக்கு முன்னதாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட என்.ஆர். காங்கிரஸின் ரங்கசாமிக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

புதுச்சேரியில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ரங்கசாமி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.  இதன் முடிவுகள் இன்று வெளிவந்தன.  அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனால், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளும்படியும்,  அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படியும் முதலமைச்சர் ரங்கசாமி கேட்டு கொண்டார்.

Also Read | Puducherry பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த 11 பேருக்கு கோவிட் தொற்று

முன்னதாக, புதுச்சேரி மாநில அரசின் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ள வந்தவர்களில் 11 பேருக்கு கோவிட் தொற்று இருந்தது உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நோய்த்தொற்று இருந்தவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை, அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

ராஜ் நிவாஸ் (Raj Nivas) வளாகத்தில் முதலமைச்சர் என் ரங்கசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பலரில் 11 பேருக்கு கோவிட் நோய் இருப்பது உறுதியானது.  

 

பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ள வருபவர்கள் கோவிட் இல்லை என்ற சான்றிதழை (Covid negative certificate) கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ள வந்தவர்களை சோதிக்க ஒரு மொபைல் கோவிட் பரிசோதனைக் குழுவை புதுச்சேரி சுகாதாரத் துறை நியமித்திருந்தது.

Also Read | புதுச்சேரியில் N.R.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றார்

ராஜ் நிவாஸை ஒட்டியுள்ள பாரதி பூங்கா (Bharathi park) வளாகத்தில் மொத்தம் 183 பேருக்கு ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் (Rapid Antigen Test (RAT)) எடுக்கப்பட்டது.  அதில் 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் காவல்துறைப் பணியாளர்கள் மற்றும் இருவர் AINRC இன் அழைப்பாளர்கள். இவர்கள் அனைவருக்கும் அறிகுறியற்ற கோவிட் தாக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.

கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட யாரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை, உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக புதுச்சேரி அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | ஜோஹன்னஸ்பர்க் - தோஹா வழியாக இந்தியாவுக்கு ஹெராயின் கடத்தல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News