Viral Video: திருமணத்தில் மாஸ் எண்ட்ரி கொடுக்க நினைத்த ஜோடிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

சமீப காலங்களில் மணமக்கள் திருமண மண்டபத்துக்கு நுழையும் முறையிலும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. தேர், கார், ஊஞ்சல், கிரேன் என பல வகைகளில் ஜோடிகளின் எண்ட்ரி நடக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2021, 04:58 PM IST
Viral Video: திருமணத்தில் மாஸ் எண்ட்ரி கொடுக்க நினைத்த ஜோடிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!  title=

இணையம் முழுவதும் விசித்திரமான காணொளிகளால் நிரம்பியுள்ளது. அதில் சிலபல வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அதேநேரத்தில் சில வீடியோக்களை பார்த்து "அய்யோ இப்படி நடந்துவிட்டதே" என ஆதங்கமும் படுவது உண்டு. 

சமீப காலங்களில் திருமண நிகழ்ச்சி குறித்த வீடியோக்கள் (Marriage Video) இணையத்தை கலக்கி வருகின்றன. இணைய உலகம் மிகவும் வேடிக்கையானது. நிஜ வாழ்க்கையில் நாம் கண்ணால் காண முடியாத பல விஷயங்களை இங்கே மிக எளிதாக கண்டு விடலாம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.

தற்போது நாடு முழுவதும் திருமண சீசன் (Marriage Season in India) தொடங்கியுள்ளதால், திருமணம் குறித்த பல வீடியோக்கள் சமூக ஊடங்களில் பதிவேற்றப்பட்டு வருகிறது. அதில் இருக்கும் ஒரு வேடிக்கையான வீடியோ (Funny Video) குறித்து தான், உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

மனித வாழ்க்கையில் திருமணம் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அதுவும் தங்கள் வாழ்க்கையில் "திருமணம்" மறக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும் என திருமண ஜோடிகள் விரும்புகிறார்கள். தங்கள் திருமணம் மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், அதேபோல மற்றவர்களை கவர வேண்டும் என்பதற்காகவும், சமீப காலமாக திருமண ஜோடிகள் மண்டபத்துக்குள் எண்ட்ரி கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

ALSO READ | Viral Video: ‘என் ஆளை விடுங்க’; கோழிக்காக சேவல் போட்ட சண்டை வீடியோ!

"விளையாட்டு வினை ஆகலாம்" என்பது போல, சில சமயம் வேடிக்கையான சம்பவம் கூட சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதுபோன்ற இரு சம்பவம் குறித்து பார்ப்போம்.

சமீபத்தில் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்த ஒரு திருமண நிகழ்சியில், ஒரு அழகான, பிரம்மாண்டமான ஊஞ்சலில் திருமண மண்டபத்துக்குள் மணப்பெண்ணும், மணமகனும் சந்தோசமாக வருகிறார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக மணமகனும், மணமகளும் ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்து காயமடைகிறார்கள். இருவரும் சுமார் 12 அடி உயரத்தில் இருந்து மேடையில் விழுந்தனர். இது அங்கிருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரம்மாண்டமாக அமைந்திருக்க வேண்டிய ஜோடிகளின் எண்ட்ரி பரிதாபமாகிப் போனது. தற்போது அந்த வீடியோ வைரலாகி (Viral Video) வருகிறது. 

அதிர்ச்சியூட்டும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

இந்த திருமண ஜோடி கீழே விழுந்ததைக் கண்ட விருந்தினர்கள், தம்பதியினரின் உறவினர்கள் உள்ளிட்டோர் அலறியடித்துக்கொண்டு மேடையை நோக்கி ஓடினர். இந்த விபத்தால் மணமகன், மணமகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் பொறுப்பேற்று தம்பதிக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. 

30 நிமிடங்களுக்குப் பிறகு இந்த பரபரப்பு அடங்கியதும், அந்த ஜோடி, தங்கள் திருமண சடங்குகளை தொடர்ந்தனர்.

ALSO READ | Monkey Rescue: அன்பே சிவம் என்பதை நிரூபித்து குரங்குக்கு உயிர் கொடுத்த தமிழன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News