)
Video Of Man Escaping From Crocodile Attack : இணையத்தில் வைரலாகும் சில வீடியோக்கள், நம் இதயத்துடிப்பை எகிற செய்வதோடு, மினி ஹார்ட் அட்டாக்கையே கொடுத்து விடும். இவற்றில் பெரும்பாலும், ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய வீடியோக்கள், சாகச விரும்பிகளின் விபரீத விபத்து ஆகியவை அதிக வியூஸ் மற்றும் லைக்சை அள்ளி கொடுக்கும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் இப்போது இணையவாசிகளை வாய்பிளக்க செய்திருக்கிறது. அந்த வீடியோவையும், அந்த வீடியோவில் நடந்த சம்பவத்தையும் இங்கு பார்க்கலாம்.
வைரல் வீடியோ:
இதயத்துடிப்பை எகிற செய்யும் இந்த வீடியோ, 25 வினாடிகள் கொண்டதாக இருக்கிறது. குறைவான நேரம் கொண்ட வீடியோ என்றாலும், ஒரு பேய் படம் பார்த்தது போன்ற உணர்வை கொடுக்கிறது இதில் இடம்பெற்றுள்ள காட்சி. இந்த வீடியோ, கடந்த ஜூன் 4ஆம் தேதியன்று, டிஸ்கவர் ஷார்க்ஸ் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவின் ஆரம்பத்தில், ஒரு நபர் நதியின் அருகே இருக்கும் கரையில் கேஷுவலாக ஆமர்ந்திருக்கிறார். அப்படியே அந்த நதியில் இருக்கும் ஒரு முதலைக்கு அவர் ஒரு துண்டு கறியையும் வழங்குகிறார். அதை மெதுவாக வாங்க வந்த அந்த முதலை, திடீரென அந்த இளைஞரை தன் பக்கம் இழுத்தது. முதலையின் இந்த செயலை சற்றும் எதிர்பாராத அந்த இளைஞர், பயந்து போய் முதலில் தடுமாறினார். பின்னர், சுதாரித்துக்கொண்டு, தட்டுத்தடுமாறி மேலே எழுந்து நின்று அங்கிருந்து ஓடிவிட்டார்.
ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்..
இப்படி சாவை அருகில் பார்த்தவர்களை ஆங்கிலத்தில் Near Death Experience-ஐ சந்தித்தவர்கள் என்று கூறுவர். அந்த இளைஞரும் தனது சாவை அருகில் பார்த்துவிட்டுதான் வந்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து ஏராளமான நெட்டிசன்கள் தற்போது ரியாக்ட் செய்து வருகின்றனர்.
ஒரு சிலர், “ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆகிட்டான்..நல்ல வேலை...” என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர், அந்த இளைஞரை விமர்சித்து வருகின்றனர்.
முதலைகள், ஆதி காலம் முதல் வேட்டையாடும் பிராணிகளாக இருக்கின்றன. இவை, முன்கூட்டி எந்த அறிகுறியும் கொடுக்காமல் திடீரென தாக்கும். எனவே இது போன்ற விலங்குகளின் அருகில் செல்வதற்கே பயர் அஞ்சி நடுங்குவதுண்டு. ஆனால், இந்த வீடியோவில் இருக்கும் இளைஞர், அந்த முதலைக்கு மிக அருகில் சென்று உணவு கொடுக்கிறார்.
முதலைகளின் இயற்கை..
“இப்படி யாரேனும் அருகில் சென்றால் முதலைகள் துளியும் யோசிக்காமல் சாப்பிட்டு விடும். ஒரு தவறான மூவ் செய்தால், அவ்வளவுதான் கதை முடிந்தது. ஆனால், அதற்காக அவற்றை குறை சொல்ல முடியாது. அவற்றிற்கு மரியாதை கொடுத்து, அவற்றிடம் இருந்து விலகியிருப்பது நல்லது. அவற்றின் அழகை தூரத்தில் இருந்து ரசிக்கலாம். ஆனால், அவற்றின் இயற்கையை நாம் சாதாரணமாக எடை போடக்கூடாது” என்று அந்த வீடியோவின் கேப்ஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ, தற்போது பல லட்ச வியூஸ்களை கடந்தும், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களை கடந்துள்ளது. ஒரு சிலர், அந்த இளைஞரின் இடத்தில் தான் இருந்திருந்தால் கண்டிப்பாக முதலைக்கு இரையாகியிருப்பேன் என்றும், அப்படி இல்லை என்றால் ஹார்ட் அட்டாக் வந்து செத்திருப்பேன் என்றும் கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ