Newlywed Woman Killed Her Husband : திருமணமாகி சில நாட்களிலேயே, தேனிலவுக்கு அழைத்துச் சென்ற மேகாலயாவில் மனைவி கணவனை கொண்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதில், திருமணமான 15 நாட்களுக்குள்ளாகவே ஒருவர் தனது கணவரை கொன்றிருக்கிறார். அது ஏன்? இந்த கொலைக்கு பின் இருக்கும் காரணம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
15 நாட்களில் கொலை:
மகாராஷ்டிராவின் சங்க்லி மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அந்த பெண்ணின் பெயர் ராதிகா, வயது 27. இவர், அனில் லோகாந்தே என்கிற 53 வயது நபரை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்திருக்கிறார்.
இவர்கள், குப்வாத் எனும் இடத்தி தங்கி வந்திருக்கின்றனர். இது, அனிலுக்கு 2ஆவது திருமணம் ஆகும். இவரது முதல் மனைவி புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு 2ஆம் திருமணம் செய்து கொள்ள நினைத்த இவர், தன்னை விட 26 வயது குறைந்த ராதிகாவை திருமணம் செய்திருக்கிறார்.
தூக்கத்தில் கொலை..
புதன்கிழமையான நேற்று, அனிலின் மனைவி அவரை கோடாரியை எடுத்து கொன்றிருக்கிறார். அப்படி கொலை செய்யும் போது அனில் தூக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் இந்த கொலையை கண்மூடித்தனமாக கோபபத்தில் செய்து விட்டதாக ஒப்பு கொன்றிருக்கிறார். அந்த பெண்ணை, கைது செய்த போலீஸார் கொலை வழக்கை அவர் மீது பதிவு செய்திருப்பதாக இந்த வழக்கை கையாளும் அதிகாரி போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.
செக்ஸ் டார்ச்சர்!
திருமணம் முடித்த பிறகு, ராதிகா தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று செக்ஸ் டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. பல நாள், இந்த டார்ச்சர் தொடர்ந்ததாகவும், இதனால், கோபத்தில் ராதிகா அவரை கொலை செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். கொலை செய்வதற்கு முந்தைய இரவு, தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாகத்தான் அவர் கோபம் தலைக்கேறி அனிலை கொலை செய்திருக்கிறார்.
மேகாலயா கொலை வழக்கு:
மேகாலயாவிற்கு, தனது கணவரை தேனிலவிற்கு அழைத்து சென்று ஆட்களை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சோனம் என்ற அந்த பெண், ராஜா ரகுவன்ஷியை, கடந்த மே மாதம் கரம் பிடித்திருக்கிறார். திருமணம் முடிந்தவுடன் தேனிலவிற்கு சென்ற இவர்கள் சில நாட்கள் கழித்து காணாமல் போயிருக்கின்றனர். அதன் பிறகு ராஜாவின் உடல் மலை பள்ளத்தாக்கில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, அவரது மனைவி சோனம் தான் கடத்தப்பட்டதாக கூறி போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். தொடர் விசாரணைக்கு பிறகு, தான் தனது காதலருடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், இதே போன்ற ஒரு சம்பவம் தற்போது நடந்திருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ