Viral Video Of Snake Dragging Dog : ஒரு ராட்சத நாகம், நாயை இழுத்துக்கொண்டு தண்ணீருக்குள் போவதும், அதனை 3 பேர் காப்பாற்ற முயன்றதும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video Of Snake Dragging Dog : வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகும் வீடியோக்கள், நமது மனதை படைப்பதைக்க வைக்கும் வகையில் இருக்கின்றன. அதிலும் மிருகங்கள் மனிதர்களை வேட்டையாடுவது, அல்லது பிற மிருகங்களை அடித்து தின்பதெல்லாம் பார்ப்பதற்கு கொடுமையாக இருக்கும். ஆனால் இதை பார்க்கும் போது மட்டும் தான் மிருகங்களின் இயல்பு அப்படித்தான் என்பது நமக்கு தெரியவரும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வைரல் வீடியோ:
இந்த வீடியோவில் முதலில் காண்பிப்பது நதி போன்ற ஒரு இடத்தையும் அதிலிருந்து ஒருவர் எதையோ தூக்க முயல்வதையும்தான். சிறிது நேரம் கழித்து பார்த்தால் தான் தெரிகிறது அவர்கள் இழுக்க முயல்வது ஒரு பெரிய ராட்சத பாம்பு என்பது. அந்தப் பாம்பு ஒரு கருப்பு நாயை தனது உடலால் அப்படியே சுற்றிக்கொண்டு நதிக்குள் இழுத்து சென்றுவிட்டது. அதன் வாழை மட்டும் பிடித்து இழுத்த மூன்று பேர், நாயை இந்த பாம்பை விட்டுவிடும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அந்த பாம்பு கிடக்கு பிடி போட்டு அந்த நாயை சுற்றி வளைத்திருந்தது. இருவர் அந்த பாம்பின் வாலை பிடித்துக்கொள்ள, ஒருவர் அந்த பாம்பின் தலைப்பகுதிக்கு அருகே வந்து அதனை ஒரு கொம்பால் அடித்தார். அதன் பிறகு, அந்தப் பாம்பு நாயை விட்டுவிட்டது.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பலர் மனிதத்தன்மைக்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு என்றும், பலரும் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும் வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.
நாய்க்கு என்ன ஆச்சு?
வீடியோவின் ஆரம்பத்தில் பாம்பு நாயின் உடலை சுற்றிக்கொண்டு செல்வதை பார்க்கும் போது, நான் இறந்துவிட்டது போல தான் இருந்தது. ஆனால் தான் அசைந்தால் கண்டிப்பாக உயிருக்கு ஆபத்து நெறிடும் என்பதை உணர்ந்து அந்த நாய் அப்படியே படுத்து இருந்தது. மூன்று பேர் சேர்ந்து பாம்பை அந்த நாயை விட்டு விலகுமாறு செய்த பிறகு, அந்த நாயும் குரைத்துக் கொண்டு வாலாட்டியபடி சென்று விட்டது. அந்த பெரும் நாகம் தரையில் மெலிந்தவாறு அப்படியே நின்றது. ஆனால் நாயே அந்த நாகம் விட்ட பிறகும் கூட ஒருவர் ஆத்திரம் தீராமல் அதன் தலை மீது கம்பை வைத்து அடித்தார். இதனால் அந்த ஞாபகம் அப்படியே துவண்டு போனதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
நெட்டிசன்கள் ரியாக்ஷன்..
மேற்கூறிய வீடியோவை பார்த்த இணையவாசிகள் இருதரப்பாக தங்களது கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர். ஒரு சிலர் இந்த நாயை காப்பாற்றிய மூன்று பேரை பாராட்ட, இன்னும் சிலர் நாயை காப்பாற்றிய பிறகு ஏன் அந்த பாம்பை இப்படி அடிக்க வேண்டும்? என்று கேட்டு வருகின்றனர். “பாம்பு இழுத்துச்சென்றும், நதிக்குள் மூழ்கியும், மூச்சுத்திணறியும், இப்போதும் உயிருடன் இருக்கிறதே இந்த நாய்” என்று சிலர் அந்த நாயக்கு சல்யூட் அடித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ, பல மில்லியன் வியூஸ்களை கடந்ததோடு, பல லட்ச லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ