Bride Dies Of Heart Attack In Haldi Ceremony Viral Video : குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தர வயதுடையோர், வயதானவர்கள் என, பலர் சமீப காலங்களில் எதிர்பாராத விதமாக உயிரிழந்து வருகின்றனர். 8 வயது குழந்தை முதல், 22 வயது இளம் பெண் வரை யாரையும் இந்த எதிர்பாராத மரணம் விட்டுவைப்பதில்லை. இவர்களில் பெரும்பாலானோர் மயக்கமடைந்தும், மூச்சுத்திணறியும், மாரடைப்பு காரணமாகவும் உயிரிழந்து வருகின்றனர்.
பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது, திருமண நாளில் நடனமாடி கொண்டிருந்த போது, நண்பர்களுடன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, வாகமனம் ஓட்டிக்கொண்டிருக்கும் போது என இந்த மாரடைப்பானது எப்போது வருகிறது, எப்படி வருகிறது என்பதே தெரியவில்லை. அப்படித்தான், இங்கும் ஒரு மணப்பெண்ணுக்கு அவரது திருமண நாளே உயிரிழந்த நாளாக மாறியிருக்கிறது.
ஹல்தி நிகழ்ச்சி:
இந்த சம்பவம், உத்திர பிரதேசத்தில் இருக்கும் படுவான் எனும் இடத்தில் நடந்திருக்கிறது. வட இந்தியாவில், திருமணத்திற்கு முன்னர் ஹல்தி, மெகந்தி என பல நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அப்படித்தான், 22 வயது இளம் பெண் ஒருவரும் கடந்த மே 4ஆம் தேதி இரவு அன்று, நாளை நடக்கவிருக்கும் தனது திருமணம் குறித்து மகிழ்ச்சியிலும் ஆர்வத்திலும் இருந்திருக்கிறார்.
திருமணத்திற்கு முந்தைய நாள், இவரது கிராமத்தில் அனைவரும் சேர்ந்து ஹல்தி நிகழ்ச்சியை இவருக்காக ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதில் மஞ்சள் வைத்து, பாடல் போட்டு பலர் மகிழ்ச்சியுடன் நடனமாடியிருக்கிறார். இந்த மணப்பெண்ணும் மகிழ்ச்சி பொங்க நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், சுற்றி இருந்தவர்களுக்கும், அந்த மணப்பெண்ணுக்கும் தெரியவில்லை, இதுதான் அவர் மகிழ்ச்சியாக இருந்த கடைசி தருணம் என்று.
बदायूं
"जिस घर में गूंजनी थी शहनाइयाँ, वहाँ गूंज उठा सन्नाटा..."
हल्दी की रस्म के बाद डांस करते समय अचानक थम गई दुल्हन की सांसें, आज ही आनी थी बारात।
शादी से पहले दुल्हन की मौत ने छीन ली सारी खुशियां, परिवार में पसरा मातम |
सात फेरों के सपने संजोए दुल्हन की डोली… pic.twitter.com/Qqj4Xkp1bV
— हिन्दी ख़बर | Hindi Khabar (@HindiKhabar) May 5, 2025
உயிரிழப்பு:
மகிழ்ச்சியாக பிடித்த பாடல் ஒன்றுக்கு நடமாடிய அந்த பெண், அதன் பிறகு, திடீரென அந்த பெண் மயங்கி விழுந்ததாகவும், பின்னர் அவரிடம் மூச்சு பேச்சே இல்லை என்றும் கூறப்படுகிறது. அருகிலிருந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அவருக்கு உதவ முயன்றிருக்கின்றனர். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பெண் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த இளம் பெண்ணின் உயிரிழப்பு குறித்து அவ்வூர் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இது உண்மையிலேயே மாரடைப்பு தானா? அல்லது இதில் வேறு ஏதேனும் சந்தேகிக்கும் வகையில் நடந்திருக்குமா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெட்டிசன்கள் ரியாக்ஷன்..
இந்த பெண் இப்படி மகிழ்ச்சியா நடனமாடும் வீடியோவும், அடுத்து அந்த பெண்ணின் துக்க வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சியான திருமண நாளே, இப்படி, துக்கமான நாளாக அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு மாறியதை நினைத்து, நெட்டிசன்கள் பலர் தங்களது இரங்களல்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய நபர்! வைரலாகும் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ