)
UP Husband Bite Off Wife Nose : நாளிதழை புரட்டினாலே நாளுக்கு நாள், நம்ப முடியாத செய்திகளைத்தான் பார்க்க முடிகிறது. அதிலும், குறிப்பாக இந்தியாவை பொருத்தவரை, நம் நாட்டின் பெரிய மாநிலமாக கருதப்படும் உத்தர பிரதேசத்தில்தான், பல வினோதமான செயல்கள் நடந்து வருகிறது. இங்குதான், இன்ஸ்டாகிராமில் 2 ஃபாலோவர்ஸை இழந்ததற்கு கணவன் மீது புகார் கொடுப்பது, கணவனை மனைவி கொலை செய்வது என்று, இங்கு நடக்கும் அட்ராசிட்டிகளுக்கு ஒரு அளவே இல்லாமல் இருக்கிறது. அப்படித்தான் தற்போதும் ஒரு சமபவம் நடந்துள்ளது.
மூக்கை கடித்து துப்பிய கணவன்:
உத்திர பிரதேசத்தில், ஒரு கணவன், தனது மனைவியின் மூக்கை கடித்து துப்பியிருக்கிறார். 25 வயதான அந்த பெண், அடிப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு, அவரது கணவனை விசாரணைக்காக போலீஸார் அழைத்து சென்றிருக்கின்றனர். அவர் இதை ஏன் செய்தார் தெரியுமா?
காரணம் என்ன?
கணவன், மனைவியின் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் உத்தர பிரதேசத்தில் இருக்கும் ஹர்டாய் எனும் கிராமத்தில் நடந்துள்ளது. அந்த கணவரின் பெயர், ராம் கைல்வான். இவரது மனைவி, அதே கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தனது மனைவியை தொடர்ந்து சில நாட்களாக அவர் கண்காணித்து வந்திருக்கிறார்.
சம்பவ தினத்தன்று, தனது மனைவி அவரது காதலனின் வீட்டுக்குள் செல்வதை இந்த நபர் பார்த்திருக்கிறார். இதையடுத்து மனைவியை பின்தொடர்ந்து அவரும் அந்த வீட்டிற்குள் சென்றிருக்கிறார். இதையடுத்து மனைவி, அவரது காதலன் மற்றும் கணவர் ராம் ஆகியோருக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்திருக்கிரது. இதையடுத்து, பிரச்சனை முற்றிய சமயத்தில்தான், அந்த கணவர் அப்பெண்ணின் காதலர் முன்னிலையிலேயே அவரது மூக்கை கடித்து இருக்கிறார்.
அந்த பெண் அலரும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவருக்கு உதவியிருக்கின்றனர். முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட இருந்த அந்த பெண்ணை மீட்ட அருகில் இருந்தவர்களும் குடும்பத்தினரும் காவல் துறையினரிடம் இது குறித்து தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். இவரது நிலையை பார்த்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனைக்கு போக சொல்லியிருக்கின்றனர்.
போலீஸார், கணவரை கைது செய்து விசாரித்து வருவதாக கூறியிருக்கின்றனர். மேலும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அனைத்து கோணங்களில் இருந்தும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன், மனைவியின் மூக்கு வசீகரமாக இருந்த காரணத்தால் கணவர் ஒருவர் அவரது மூக்கை கடித்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ