)
Railway Tracks Wedding : கடந்த சில மாதங்களாகவே, இந்தியாவில் பலவித வினோதமான விஷயங்கள் நடைப்பெற்று வருகின்றன. இதை படிக்கும் போதும் பார்க்கும் போதும், ‘உலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?’ என நமக்கு கேட்க தாேன்றுகிறது. இந்தியாவிலும், சில பேர் மூட நம்பிக்கைகள் காரணமாக பல விஷயங்களை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு செய்து வருகின்றனர். அப்படி, சில பேர் செய்த சம்பவம்தான், தற்போது பேச்சுப்பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளையும் தெரிவித்து இருக்கின்றனர்.
அதிகரிக்கும் ரயில் விபத்துகள்..
இந்தியாவில் 2 ஆண்டுகளில் பல ரயில் விபத்துகள் நிகழ்ந்து விட்டன. குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து, கடந்த ஆண்டு நடந்த கூட்ஸ் வண்டி விபத்து உள்ளிட்டவை அதிர்வலைகளை ஏற்படுத்தின. சமீபத்தில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கூட எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டு 5 வேகன்கள் எரிந்தன. இதனால், மக்களின் பயணங்கள் நின்று போனது. இது போன்ற ரயில் விபத்துகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
தண்டவாளங்களுக்கு திருமணம் செய்து வைத்தால் விபத்து நடக்காதாம்!
— பகுத்தறிவாளன் (@DRAVIDA_WARRIOR) July 13, 2025
The superstious! pic.twitter.com/PLsHuVQg6C
வைலாகும் இந்த வீடியோவில், சில பேர், அருகருகே இருக்கும் ரயில் தண்டவாளங்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். விஷேச பூஜைகளை செய்து, மஞ்சள் பூசி, எலுமிச்சைப்பழம் உள்ளிட்டவற்றை வைத்து திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். அந்த இரு தண்டவாளங்களையும் கணவன்-மனைவியாக பாவித்து இப்படி திருமணம் செய்து வைத்திருக்கும் சம்பவம், மக்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த சம்பவம் நடந்தது, வட இந்தியாவா-தென்னிந்தியாவா, எந்த ஊரில், எந்த ரயில்வே டிராக்கில் நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.
நெட்டிசன்களின் கருத்து..
இப்படி ரயில் தண்டவாளங்களுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலர் காமெடியான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலர், “தண்டவாளம் குட்டி போட்டா சொல்லுங்க..” என்று கூற, இன்னும் சிலர், “விவாகரத்து ஆச்சுன்னா என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டு வருகின்றானர். அறிவியல் அறிவு இல்லை என்றால் பரவாயில்லை, அறிவே இல்லை என்றால் என்ன செய்வது என்று ஒருவர் கேட்டிருக்கிறார். நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க எத்தனையோ வழிகள் இருக்கும் போது, இதை போன்ற விஷயங்களை ஏன் செய்கின்றனர் என்பது பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ