)
Watch Video Plane Crash Survivor Viswas Kumar : கடந்த ஜூன் 12ஆம் தேதி, உலகையே உலுக்கிய நிகழ்வாக இருந்தது, அகமதாபாத் விமான விபத்து. ஏர் இந்தியாவின் 171 போயிங் ரக விமானம் சம்பவ தினத்தன்று மதியம் 1:18 அளவில் அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனை நோக்கி கிளம்பியது. கிளம்பிய சில வினாடிகளிலேயே இந்த விமானம், மருத்துவ மாணவர்கள் தங்கியிருந்த விடுதி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
250 பேருக்கு மேல் பலி!
விபத்துக்குள்ளான விமானத்தில், விமானிகள், பயணிகள், விமான ஊழியர்கள், பணி விமான பணிப்பெண்கள் என சுமார் 242 பேர் பயணம் செய்தனர். விபத்தின் வீரியத்தை அருகில் இருந்து பார்த்த அதிகாரிகள் அனைவரும் இறந்து விட்டதாக சந்தேகித்தனர். ஆனால், ஒரே ஒரு பயணி மட்டும் உயிர்த்தப்பினார். அவரது பெயர், விஸ்வாஸ் குமார். 11 A இருக்கையில் அமர்ந்திருந்த இவர், எப்படி இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பினார் என்பது இன்னமும் பலருக்கு பெரும் கேள்விக்குரியாக இருக்கிறது.
விஸ்வாஸை தவிர, அந்த விமானத்தில் பயணித்த 241 பேரும், மருத்துவ கல்லூரி மாணவர்களும், சாலையோரத்தில் இருந்தவர்கள் பலரும் உயிரிழந்தனர். சிலர் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 250ஐ தாண்டியது.
சகோதரரின் உடல் அடையாளம் காணப்பட்டது:
விஸ்வாஸ் குமார், விமானம் விபத்துக்குள்ளான போது கையில் மொபைல் போனுடன் நடந்து வந்த வீடியோ சமீபத்தில் வெளியானது. லண்டன் குடியுரிமை பெற்ற இந்தியரான இவர், தனது சகோதரர் அஜய்யுடன் லண்டனுக்கு திரும்பும்போதுதான் விமான விபத்து நடந்தது. விஸ்வாஸ் குமாரின் சகோதரர் அவருக்கு அருகில் 11J சீட்டில் அமர்ந்திருக்கிறார். இவரும் இந்த விமான விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தில் அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல்கள் அனைத்தும் உருகுலைந்து போய் விட்டன. இதையடுத்து, விமான விபத்தில் பலியான அனைவரது உறவினர்களும் DNA மாதிரிக்களை கொடுத்து, அதற்கு பொருந்தும் உடல்களை வாங்குவதற்காக காத்துக்கொண்டுள்ளனர். இதில், விஸ்வாஸ் குமாரின் சகோதரர் உடலும் DNA பரிசாேதனை மூலம் அடையாளம் காணப்பட்டது.
வைரலாகும் வீடியோ:
விஸ்வாஸ் குமார், விமானத்தில் இருந்து விழுந்ததால் அவருக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த அடி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சகோதரரின் உடல் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, சொந்த ஊரான குஜராத்தில் இருக்கும் Diu-விற்கு அவர் திரும்பியிருக்கிறார். தனது சகோதரரின் உடலை அவர் பல்லக்கில் கொண்டு செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
VIDEO | Ahmedabad Plane Crash: Vishwas Kumar, the lone survivor of the incident, attended the last rites of his brother Ajay, who was travelling with him on the ill-fated Air India flight AI 171 from Ahmedabad to London on June 12. pic.twitter.com/Z8RrLdIeoB
— Press Trust of India (@PTI_News) June 18, 2025
இந்த வீடியாேவில் அவர் தலையில் பிளாஸ்திரி, கையில் கட்டுப்போட்ட நிலையில் தனது சகோதரரின் உடல் இருக்கும் பல்லக்கை தூக்கி செல்கிறார். பிறர், தன்னிடம் கொடுக்குமாறு அவரை வற்புறுத்தியும் அவர் அந்த பல்லக்கை கேட்பவர் கையில் தரவில்லை. இந்த வீடியோவை பார்த்தவர்கள், இது இதயத்தை நொறுக்கும் வகையில் இருப்பதாக கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ